Pages

Saturday, April 09, 2005

உயிர் தொலைத்தல்

நாவாந்துறைடானியல்ஜீவா
வெண்பனித் துகள்கள்
வந்திறங்கும் இரவில்
நம் காதல்
காத்திருக்க காலமற்று
கரைந்து போனது....
வெட்டித் தெறித்த
மின்னலைக் கோடுகளாய்
உன் நினைவு மட்டும்....
முறிந்த இடம்
இன்னும்
மூடுபனி போல்....
தொலைந்தலுக்கான
காரணம்....
இன்று வரை
தொடுவானம் போல்
நீ கழட்டிய
காதல் காயும் முன்னரே
இன்னொரு விழிக்குள்....
துடுப்பே ,இல்லாதவனுக்கு
இனி எதற்கு தோணி....?
நம் நேசம்
ஏன் கண் மூடிக் கொண்டது....?
என் விசும்பலில்
ஒரு வினாமட்டும்
அடிக்கடி வந்து போகுது
ஏழை....
உனக்கேன் காதல்....!
உனக்காக....
என் தேடல்
நேற்று வரை
நிலைத்திருந்தது....
இன்று
என் உடல் ஓய்வெடுக்க
முன்னிரவில் உன் முகம்
ஏனோ நினைவுக்குள்....
உன் மெல்லியகுரல்
காதில் விழும்
நேரமல்லவா...
அதனால்தான்
காய்ந்து போன பி£¤வுக்குள்
ஈரம் வந்து ஒட்டிக்கொண்டது.
நீ நிலவாக
குளிர் வாயென்றுதான்
நினைத்திருந்தேன்
அது என் தவறுதான்
அதற்காக இந்த மண்ணுக்கேயு£¤ய
குளிரைப்போல் ,ருக்கலாம...?
நான் தேவனுமில்ல
நீ மோ¤யுமில்ல
ஆனால்....!
என்னுள் நீ
வேர் கொண்டது
வெறும் பேச்சல்ல
அது முடிவிலியான
ஒரு நினைவு...

No comments: