Pages

Saturday, April 09, 2005

நிலவோடு நீ வருவாய்

நாவாந்துறை டானியல் ஜீவா

நீ விழித்திருக்கும் போது

நான் தூங்கிறேன்

நீ தூங்கும் போது

நான் விழித்திருக்கிறேன்



நீயொரு தேசமாய்

நானொரு தேசமாய்

ஆயினும்

கனவில் கூட

உன்

கண்கள்தான்?



ஓ வென்று அழுதாலும்

சீ என்று சினந்தாலும்

மனதில் நிலையாய்

நிற்பது

உன் வா£த்தைகள்

மட்டும்தான.;?..!



நீயிருக்கும் போது

என் இதயம்

இடிபோல

சுமைகளும்

சுகமாய் சுமக்கும்



நீயில்லா

என்னிடம்@

இளவம் பஞ்சுக்

கனம் போல்

நெஞ்சில்

இறங்கினாலும்

நெருப்பில் விழுந்த

புழுவைப் போல்

நெகிழ்கிறேன்?.



தெருவில்

இறங்கினால்

நிலவோடு

நீ வருவாய்?



நான்

வேலைக்குச் சென்றால்

என் உடையோடு

நீ ஒட்டிக் கொள்கிறாய்?



வீடு திரும்பி

தூங்க@

துணைக்கு

நீ வருகிறாய்



என் உடலே

உனக்காக

உருவெடுத்திருக்கின்றது.





என் விழிகள்

விழித்தாலே

உன் நினைவோடு

நீர்த்திவலை



ஆயினும்?..?



கடந்த கால வாழ்க்கை

என்னைப் பக்குவப்படுத்தியதினால்

நான்

எனக்கான

விடுதலையை

வெல்ல வேண்டுமென்றென்....

நீ

உன்னால் அதுவரை

காத்திருக்க முடியாதென்றாய்



நம் நெருக்கம்

நோ;கோட்டில்

நகர மறுக்க

முறிந்தது

நம் உறவு?



உன்னைப் பி£¤ந்தது

துயரமா??

அது சொல்லி

மாளத் துயரம்



குற்ற உணர்ச்சி

கூனிப்போக

மனசு வலித்தது.

வெகு நாளாய்

தூக்கம் வரல...





நீ பி£¤ந்த போதே

என் உயிரும்

பி£¤ந்திருக்க வேண்டும்....

எதற்காக இன்னும்

என் உடலில் உயிர்?..?

....

பனிப்புலத்து

பட்டமரமொன்று

தனக்குள் தன்னுயூரை

தேக்கி வைத்திருப்பது போல்....


----
உன்னில் உறைந்து போனேன்...
நாவாந்துறைடானியல்ஜீவா

ஊசிக் குளிர்

வந்தென்னை

உரசித் தாக்க

உறை நிலைப் படலமாய்

நீ எந்தன்

நெஞ்சில்..



வாழ்வு

வறுமையின்

கரு முகிலாய்

உன் திருவுருவம்

மனத்திரையில்

தோன்றும் வேளை...

வெண்ணிலவாய் மாறும்


இடுப்புடைய

இடர்வந்து

நொகுமெந்தன்

மெய்யில்

என் நிழல் பார்க்க

எனக்கேது நேரம்....


இன்னும்

எனக்குள்

உன் வாசனை...


நீயும் நானும்

வெயில் சாய

வீதியில் நடந்தோம்.


கவிதையில்

பகிடி பண்ண

காற்றோடு உன் சிரிப்புதிர

எச்சி முறிகள்

என் முகத்திற்கு

சொந்தமாகும....


குளிர் காற்றும்

கொழுத்தும் வெயிலும்

கவி சொல்லும்

கனத்த மழையும்

நம் மகிழ்விற்காய்

வசப்படுத்தினோம்


வெள்ளம் வர முன்

வள்ளம் கரை சேரும்;

வீடு வந்ததும்

உன் தெருவுக்கு

ஓடி வருவேன்.


காற்றில்

கடிப்புதற

சாதாளையோடு

சுங்கான் மீன் கிடந்து

சுள்ளென்று குத்த

உன் புன்னகையை

ஒரு கணம் நினைத்தால்

விண்ணென்ற நோவெல்லாம்

விரல்களிருந்து

விடுதலையாகும்


அன்றொரு நாள்

பின்னிரவும்

பேசாமல்

புலர்ந்துபோனது.

உன் வரவிற்காக

என் உயிர்த்தீ

உருக்குலைந்து

காத்துக்கிடந்தது.


தொடும் தூரம்

நின்ற நீ

இன்று

நெடும் தூரம்

சென்று விட்டாய்


நீ நினைத்தாலே

உன் வேலிச்சிறகு

வி£¤ந்து கொடுக்க

காதல் உட்புகுந்து

உள் சதைவரை பாயும்


நானோ

ஒரு மழையின்

வருகைக்காக

வெண் பனித் தூறலில்

காத்துக்கிடக்கிறேன்


ஆயினும்

உன் உதடு தந்த

ஈரத்தை

எப்படி உலர வைக்கமுடியும்.

No comments: