Pages

Sunday, December 04, 2005

இழப்பு நாவாந்துறை டானியல் அன்ரனி



கருக்கலின் மென் இருட்டு. கனத்த மௌனத்தைக் கிழித்துக் கொண்டு காகக்கூட்டங்கள் கத்தின. தெரு நாய்கள் ஊளையிட்டன. எங்கேயோ பட்டமரப் பொந்திலிருந்து கிளிக்குஞ்சு ஒன்று எதையோ பார்த்துப் பயந்து கீச்சிட்டுக் கத்தியது.
சரசுவுக்கு விழிப்புக் கண்டது. கண்ணுக்குள் என்னவோ உருளுவது போல் கச....முசவென்று எ£¤ந்தது. தேகம் முழுவதும் அடித்துப் போட்ட சோர்வு. கிடுகு வா¤ச்சுக்களால் பகல் உள்ளே வந்தது.
“அதுக்குள்ள விடிஞ்சு போச்சா....” அவள் அலுத்துக் கொண்டாள். எப்போதும் அவளுக்கு அப்படித்தான், து£க்கத்திலிருந்து எழுந்து கொள்வதே பெரும் கவலைபோல, நேற்று அம்மன் கோயில் கடைசித் திருவிழா. ஸ்பீக்கரும் சினிமாப்பாட்டும் அந்த அயல் முழுவதும் கலகலத்துப் போயிருந்தது. இரவு வழமைபோல் குட்டித் தம்பியின் சங்கிலியன் கூத்து. திருவிழாவின் உச்சம். இரவு முழுவதும் வெற்றிலையைப் போட்டு அரைத்துக் கொண்டே கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்துவிட்டு சற்று நேரத்திற்கு முன்தான் தனது பா¤வாரங்களுடன் வந்து படுக்கையில் சா¤ந்திருந்தாள் சரசு.
குட்டித் தம்பியா¤ன் பாட்டு இப்பொழுதும் காற்றினில் கிணு....கிணுத்தது. முகம் கூட முன்னுக்கு வந்து கண்ணுக்குள் நின்றது. சரசுவுக்கு அப்படி ஒரு பி£¤யம் அவன் பாட்டில்.
அவள் எதையோ நினைத்தாள். எதற்காகவோ சி£¤த்தாள்.
“ஊ£¤ல் உள்ளவர்களெல்லாம் என்னமோ....என்னமோ.... எல்லாந்தான். வாயிலை வச்சுப் பேசுறாங்க. அது என்ன இழவோ.... அப்படி ஒரு பிரியம் எனக்கு....என்ர புருசனில் வச்சிருந்தமாதி£¤.”
பக்கத்திலே குழந்தை முலைக்காம்பைச் சப்பியபடி உறங்கிப்போயிருந்தது. அதன் கடைவாயைத் துடைத்துவிட்டு சட்டையை இழுத்துச் சா¤செய்து கொண்டே எழுந்தாள். குழந்தையின் மூத்திரத்தால் சேலை நனைந்திருந்தது. பிழிந்துவிட்டுக் கொண்டாள். கிழியல் இல்லாத பக்கமாக புரட்டிப் பார்த்து சீராக உடுத்துக் கொண்டாள். “எடி....பொன்னு....எழும்படி....நல்லா நேரம் போட்டுது....”
பொன்னுவை எழுப்பினாள். அவள் என்னென்னவோ முணுமுணுத்தாள். பக்கத்தில் கிடந்த சின்னவள் தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மறுபக்கம் திரும்பி சா¤ந்து கொண்டாள். நாகராசா, சின்னராணி மூலைக்கு ஒருத்தராய் முறுகிப் போய்க் கிடந்தனர்.
“எடி, எழும்படியென்றால்.... அங்கால பார் எல்லோரும் அவதிப்பட்டு ஓடுகினம். எழும்பு புள்ள....”
“போண....நான் இண்டைக்குப் போகல.... உம்.... உம்....”
“ஏனடி புள்ள.. திங்கட்கிழமையும் அதுவுமா.... பிழைப்புக் கிடைக்கிற நாளில.... சுறுக்கா எழும்பி வெளிக்கிடு....”
“ஒரே அலுப்பா இருக்குதண. இராவுக்கும் ஒண்டும் தரேல்ல. எனக்குச் சா¤யாகப் பசிக்குது....”
பொன்னு அழுதுவிடுவாள் போலிருந்தது. சரசுவுக்கு நினைவு இருந்தது. மத்தியானம் பாண் வாங்கிக் கொடுத்தது. அதற்குப் பின் இரவு! இரவு என்ன? முடிச்சில் கூத்துச் செலவுக்கு என்றே பிடித்து வைத்திருந்த ஒரு ரூபாக்குத்தி. அது கடலை வாங்கிக் கொடுத்ததோடு சா¤. கூத்து ரசிப்பில் எல்லாவற்றையும் தான் மறந்து விட்டாள்.
“என்ர குஞ்செல் ல....நீ போனால்தானடி நான் அடுப்புப்பத்த வைப்பன்.... நான் புள்ளைக்கு விசாலாட்சிக் கிழவி வந்தோடன கிழங்கும் சம்பலும் வாங்கி ஒருத்தருக்கும் குடுக்காம ஒழிச்சு வைப்பன்....”
“....உம் இப்பிடித்தான் நேத்துக் காலம் புறமும் சொன்னனி”
“என்ர வைரவராணை வேண்டி வைப்பன்”.
சரசு தலையில் தொட்டு வைத்தாள். பொன்னு மறுபடியும் அம்மாவை நம்பினாள். எழுந்து பாயில் குந்திக்கொண்டாள். சிக்குப் பிடித்த தலையை பற....பற....வென்று சொறிந்தாள். மறுபடியும் கண்களை மூடினாள். மீண்டும் விழித்தாள்.
சரசு குடிசை வாசலுக்கு வந்தாள். சோளகம் பிய்த்து வாங்கியது. முகட்டுக் கிடுகுகள் வா¤சைவிட்டு எம்பி....எம்பிக் குதித்தன. அப்படி ஒரு வேகம், இப்படித்தான் ஒரு நாள் சோளகம் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தபோது கணபதி இவளைத் திட்டிக் கொண்டே வடக்குப் பக்கமாகப் போனான். காற்றில் இரைச்சலுக்குள் அப்படியே அமுங்கிப் போனதில் இவளுக்கு எதுவும் கேட்கவில்லை.
அவன் அதற்குப்பின் இந்தப் பக்கமே வரவில்லை. கணபதி “வகுப்புத் தொழில்”தான் செய்து வந்தவன். அலுப்பாந்திக்கு வரும் வத்தைகளிலிருந்து மூடைகளை இறக்கி ஏதோ நாலு காசு சம்பாதிக்கச் செய்தான். மாட்டுடன் வண்டில் ஒன்றை வாங்கினான். அதற்குப் பின்தான் ஏனோ நிறையக் குடிக்கத் தொடங்கினான்.
இரவில் வருவான். நிறைவெறியில் மூர்க்கத்தனமாக சரசுவை அடிப்பான். அவளும் ஏதாவது கையில் கிடைத்தால் எறிந்து தனது இயலாமை, த்திரம் எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்வாள். பிள்ளைகள் கூக்குரல் வைக்கும். கணபதியை அறிந்த அயலவர்கள் ஏன் வரப்போகிறார்கள்? அடுத்த நாளும்....அதற்கு அடுத்த நாளும்....தாக்குதல்கள், தற்காப்புத் தாக்குதல்கள்....கூக்குரல்கள் தொடரும்.“போடா வேசயடமோனே.... விட்டுவிட்டுப் போடா குடிகார து£மமோன்....போடா....” இது சரசுவின் வாய்ப்பாடு.
கணபதி பலமுறை விட்டுவிட்டுப் போனவன்தான். தொடர்ந்து இரு இரவுகள் எப்படியோ எங்கேயோ கழித்து விடுவான். அப்புறமாக சமரசம் நடந்து கொள்ளும். இவ்வளவு அமளிக்குள்ளும் சரசு நசுக்கிடாமல் ஜந்தைப் பெற்றுப் போட்டுவிட்டாள்...
இந்த முறை கணபதி திரும்பவில்லை. ஒருநாள், இரண்டு நாள், ஒருவாரம்.... ஒரு மாதம், ஒரு வருஷம்....அவன் திரும்பவேயில்லை. இது சரசுவிற்கு ச்சா¤யமாகத்தான் இருந்தது. அவனுடைய “சா¦ரபலவீனத்தை” அறிந்து வைத்திருந்த அவளுக்கு அவனுடைய வைராக்கியம் ஒருவிதத்தில் அதிர்ச்சியாகக் கூட இருந்தது. அவளுக்கும் அப்படித்தான். ஒருநாள்.... இரண்டு நாள், ஒருவாரம்....ஒரு மாதம்.... ஒரு வருஷம்....அப்புறம் கணபதி என்ற “மனிதனை” மறந்தே போய் விட்டாள். அதற்காக துக்கப்படுவதையும் நிறுத்திக் கொண்டாள்.
சில நாட்களுக்கு முன்தான் குட்டித் தம்பியர் கதைவாக்கில் சொல்லி வைத்தார். கணபதி காங்கேசன் துறைக்கு வரும் கப்பல்களிலிருந்து மூடை இறக்குகிறானாம். அங்கேயே குடியும் குடித்தனமும் மறுபடியும் கிப் போய்விட்டதாம்.
காற்று ஒரு கணம் சுழன்றது. பக்கென்று மண்ணைத் து£வி முகத்தில் அடித்தது. சரசு கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
து£ரத்தில் வயல் வெளி தொ¤ந்தது. கூத்துக் கொட்டகையை நின்று சிலர் பி£¤த்துக் கட்டிக் கொண்டிருந்தனர். குட்டித்தம்பியரும் சிலவேளை அங்குதான் நிற்பார்.
குட்டித்தம்பியர் களையானவர், காசு உள்ளவர், வெற்றிலையும் வாயுமாய் எல்லோருடனும் சி£¤க்கச் சி£¤க்கப் பேசுவார். ராசகூத்துக்கு குட்டித்தம்பியரை அசைக்கவே முடியாது. பாட்டு அப்படி. வேஷப்பொருத்தம் அப்படி. அவருடைய இளைய பெண்ணுக்கு மூன்று பிள்ளைகள். இப்படி எல்லாம் இருந்து கொண்டும்தான் சரசுவிடம் வந்து போய்க் கொண்டிருந்தார் குட்டித்தம்பியர்.
பக்கத்துக் குடிசைகளிலும் உரத்த பேச்சுக்குரல். கடற்கரைக்குப் போவதற்கு பலர் யத்தமாகிக் கொண்டிருந்தனர்.
பொன்னு வேலி மூலைக்குள் “ஒண்டுக்கு” குந்திக் கொண்டிருந்தாள். சரசு கூரைக்கு மேல் காயப்போடடிருந்த உமலை எடுத்தாள். ஏற்கனவே கிழிந்து போயிருந்த மூலைகள் இன்னும் பொ¤தாகியிருந்தன. ஓலை எடுத்து கிழிவுகளைப் பொத்திப் போடவேண்டும் என்று நேற்று நினைத்திருந்தவள், திருவிழாச் சந்தடியில் மறந்தே போய்விட்டாள்.
உமலை வி£¤த்துப்பார்த்தாள். செதில்களும் செத்த குஞ்சுமீன்களுமாய் வெடில் பக்கென்று மூஞ்சியில் அடித்தது. வயிற்றைக் குமட்டுவது போல்.
பொன்னு இப்போ பானையைத் துளாவிக் கொண்டிருந்தாள். ஏதோ சொட்டு நீர் கைகளை நனைத்தது. முகத்தில் தடவிக் கொண்டாள். கண் பீளையையும், எச்சில் காய்ந்திருந்த கடைவாயையும் பாவாடையால் துடைத்துக் கொண்டாள். அந்தப் பாவாடை எப்படியெல்லாமோ கிழிந்து போயிருந்தது. மேல் உடம்பில் அம்மாவின் பொ¤ய சட்டை தொள தொளவென்றிருந்ததை இறுக்கி, வயிற்றுடன் முடிந்திருந்தாள்.
சரசு அவளுடைய தலையைக் கையால் நீவிவிட்டாள். அழுக்குத்துண்டு ஒன்றினால் மயிரைச் சேர்த்து சிலும்பாமல் கடடிவிட்டாள்.
“அம்மா எனக்கு....ஒரு சட்ட தைச்சு தாவண.... இதத்தானே நெடுகிலும் போடுறன். கடற்கரைக்கு வாறபொடியன் எல்லாம் எனக்கு நொட்ட சொல்லிகினம்....”
“பொறு புள்ள, சின்னாச்சி அக்காவோட நான் சீட்டு பிடிச்சிருக்கிறன். விழுந்தோடன உனக்கு சீத்தையில ஒருகவுண் தச்சுத்தருவன்....”
பொன்னு உமலைத் து£க்கிக் கொண்டாள். எப்போதாவது இவளோட கூடிப்போற சின்னவியும் எழுந்து வந்துவிட்டான்.
“கவனம் புள்ள....காத்துக்குள்ள....கார் வாறது கூடக்கேக்காது....சின்னவிய கவனமாக கையில புடிச்சுக் கூட்டிக்கொண்டு போ....”
அவர்கள் போய்விட்டார்கள். இவள் பெருமூச்சு விட்டுக்கொண்டே உள்ளே வந்தாள். குழந்தை அழுது கொண்டிருந்தது.
மூலையில் விளக்கு சா¤ந்து கிடந்தது. அதை எடுத்து நிமிர்த்தி வைத்தாள். தீப்பெட்டியை உரசிக் கொளுத்தினாள். சடக்கென்று ஒளி நிமிர்ந்தது. அத்துடன் பக்கென்று மறுபடியும் அணைந்தது.
இப்போது குழந்தை இன்னும் வீறிட்டது. தேநீராவது வைக்கலாம் என்று நினைத்தவள், புஸ்பராணியைத் தேடினாள், அங்கு ஒருவருமே இல்லை. அந்த விடிகாலையிலேயே.... எங்கேயோ ஓடிவிட்டனர். எங்கே போவார்கள். கடற்கரை குப்பை மேட்டில் எதையாவது பொறுக்கிக் கொண்டிருப்பார்கள்.
அவள் வெளியில் வந்து குரல் கொடுத்தாள்.
“எடி புஸ்பராணி....இங்க வந்து புள்ளையைத் து£க்கி வைச்சிரடி....”
வெகு அண்மையில் ஏதோ பாட்டின் முணுமுணுப்புக் கேட்டது. குட்டித்தம்பியர்தான் வந்து கொண்டிருந்தார்.
சரசு தேநீர் வைப்பதற்காக குசினிக்குள் புகுந்து விட்டாள்.
அவர் வரும் வேளைகளில் அவளுக்கு சந்தோஷந்தான். இருந்தாலும் அடிமனக் கிடக்கையில் ஏதோ துரு....துருவென்று முடக்குவாதம் செய்தது. பு£¤யாத என்னவோ ஒன்று.
“என்ன சரசு தேத்தண்ணி வைக்கிறியா.... எனக்கும் கொஞ்சம் கொண்டா சுடச்சுட.”
குட்டித்தம்பியர் வழமையாக உட்காரும் மரப்பெட்டியில் குந்திக் கொண்டார். தலைக்குமேல் பூவரசுநிழல் விழுந்திருந்தது. வெயில் சற்று எட்டித்தான் நின்று கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்திற்காவது அதில் இருக்கலாம். அப்புறம் அந்த இடத்தில் இருக்க இயலாது. உள்ளே போக வேண்டும் அல்லது வெளியே போகவேண்டும்.
சரசு தேநீர் க் கோப்பையையும் சர்க்கரைக் குறுகலையும் கொண்டு வந்து வைத்தாள். குட்டித்தம்பியர் செழுமையான அவள் உடலை ஒரு தடவை கண்களால் ஸ்பா¤சித்தார். அவளும் கவனிக்காமல் என்ன....உதட்டைப் பிதுக்கிக் கொண்டு ஒருக்களித்துப் பார்த்தாள்.
கொடுப்பிற்குள் வைத்திருந்த வெற்றிலைச் சப்பலை து£....து£வென்று துப்பிவிட்டு செம்பிலிருந்த நீ£¤னால் நன்றாக கொப்பளித்துக் கொண்டார். இதற்காகவே வந்தவர் போல் தேநீரை ருசித்துக் குடித்தார்.
அவருடைய முகத்தில் இரவு பூசிய பூச்சு இன்னும் அழியவில்லை. மழுங்க விழித்திருந்த முகத்தில் மீசையிருந்த இடத்தில் ஏதோ அழிந்துபோன கறுப்புக் கோட்டின் மெல்லிய தழும்பு. கண்களில் நித்திரையின் கனப்பு. அந்தக் கோலத்தில் அவரைப்பார்க்க சற்று வேடிக்கையாக இருந்தது. இவரா இரவு சங்கிலியனாக வீரத்தோடு பொ¤ய மீசையைத் திருகிக் கொண்டு வந்தவர்? “என்ன புள்ள, இரவு கூத்துப் பார்த்தியா.... எப்படி இருந்தது....?”
“என்ன....ஏதோ....காணாத ளாட்டம். முன்னுக்குத்தானே இருந்தனான்....பார்த்துப் பார்த்து பல்லைக் காட்டிப்போட்டு....”
குட்டித்தம்பியர் விநயமாய் சி£¤த்தார். அவரது சின்னத் தொந்தி சற்றுக் குலுங்கியது.
“அது கிடக்கட்டும் புள்ள.... என்ர படிப்பு எப்படி....?”
“பின்கூத்து நீங்க வந்த பிறகுதான் வலு எழுப்பமாக இருந்தது எண்டு எல்லோரும் பறஞ்சு கொண்டு வந்தினம்....”
குட்டித்தம்பியருக்கு வலு சந்தோஷம். தேநீர் முழுவதையும் ஒரே மூச்சில் உறிஞ்சுவிட்டு கோப்பையை வைத்தார். மடிக்குள் செருகி வைத்துக் கொண்டு வந்த சிறிய “பார்சல்” ஒன்றை அவளிடம் நீட்டிக் கொடுத்தார்.
அவள் பவிசாகச் சி£¤த்துக் கொண்டே வாங்கி வி£¤த்துப் பார்த்தாள். அது பூ விழுந்த சட்டைத்துண்டு அந்தக் கணத்தில் பொன்னுவைத்தான் நினைத்துக் கொண்டாள் சரசு. இன்னும் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அவர் எப்போதாவது இப்படித் தருவது தான். னாலும் அதற்காக ஏங்கி இருந்தவளல்ல....
இருவருமாக என்னவோ எல்லாம் பேசினர். வெளியில் யாரோ வரும் சத்தம் கேட்டது. இருவருமே ஏக காலத்தில் திரும்பிப் பார்த்தனர். பொன்னு நன்றாக நனைந்துபோய் வந்து கொண்டிருந்தாள். அவள் முகத்திலும் கைகால்களிலும் சேறு அப்பியிருந்தது. அவள் அழுதிருக்க வேண்டும். முகம் வேறு வீங்கியிருந்தது. பக்கத்தில் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு வடக்குத் தெருக்கிழவி மோ¤. அவள் தலையில் மீன் விற்கும் கடகமும், சுளகும். பின்னால் சின்னவி. கேவி....கேவி இன்னும் அழுது கொண்டுவந்தான். சரசு ஒருகணம் அப்படியே திகைத்து நின்றாள். அடுத்த கணம் குரல் எடுத்து எட்டு வீட்டுக்கு கேட்க கத்தினாள்.
“என்ன நடந்தது? என்ர புள்ளைக்கு என்ன நடந்தது? சின்னவி அடக்கி வைத்திருந்து வெடித்துச் சிதறியதுபோல் பெரும் குரல் எடுத்து அழுதான்.
“அக்கா புறக்கி வைத்திருந்த மீனை அந்த னக்கோட்டைப் பொடியன் களவெடுத்துப் போட்டான்.... அக்கா அவன அடிச்சா, அவன் அக்காவை கடலுக்க தள்ளிப் போட்டான்....உம்....உம்...”
மோ¤க்கிழவி அப்போது தான் குட்டித்தம்பியர் முற்றத்தில் இருப்பதைக் கவனித்தாள். முகம் சுறுக்கென்று உள் இழுத்துக் கொண்டது. வெறுப்பு டன் விசுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“இந்தா சரசு புள்ளயக் கூட்டிக்கொண்டு முதலில உள்ள போ....எல்லாத்தையும் நான் சொல்லுறன்.”
சரசுவுக்கு விளங்கி விட்டது. பொன்னுவை மெதுவாக அழைத்துக் கொண்டு உள்ளே போனாள். மோ¤க் கிழவியும் தொடர்ந்து போனாள். உள்ளே கிழவியின் மெல்லிய குரல் வெகுநேரம் கேட்டது. “இந்தா சரசு நான் சொல்லுறத கவனிச்சிக் கேள். விலைபோகிற குமர் வீட்டுக்கு வந்திருக்கு. இனி எண்டாலும் இந்த அறுதலிமோன அண்டப் பிடிக்காத....”
மோ¤க் கிழவி வெளியே வந்தாள். இறக்கி வைத்திருந்த கடகங்களைத் தலையில் து£க்கி வைத்துக் கொண்டாள். குட்டித்தம்பியர் இருப்பதையே கவனியாதவளாய் விடு... விடுவென நடந்தாள்.
குட்டித்தம்பியார் எதுவும் பு£¤யாதவராய் முற்றத்து மரப்பெட்டியில் இன்னமும்தான் இருந்தார். வெயில் மரப்பெட்டிக்கு அருகே வந்துவிட்டது. இனி அதில் இருக்க இயலாது. கண்கள் வேறு சுழற்றி அடித்தது. ஒரு கண் நித்திரை கொண்டுதான் தீர்க்க வேண்டும். சரசுவைப்பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்தார். வெகுநேரம் சரசு வெளியில் வரவே இல்லை. சரசு ஏன் வெளியில் வரவில்லை....?
“சரசு அப்ப நான் போட்டு வாறன்....”
அவர் எழுந்து கொண்டார். தோளில் கிடந்த துண்டினால் முகத்தை அழுத்தித் துடைத்தார். வீட்டை நோக்கி விளங்காத தீவிரத்துடன் நடக்கத் தொடங்கினார்.
சரசு வெளியில் வந்தாள். குட்டித்தம்பியர் கொண்டு வந்த துணிப்பார்சல் வி£¤த்தபடிதான் முற்றத்தில் கிடந்தது.
“குட்டித்தம்பியரும் கிழவி சொன்னதைக் கேட்டிருப்பாரோ....”
அவள் மறுபடியும் கணபதியை நினைத்துக் கொண்டாள். பொன்னு இனி மீன் பொறுக்க வெளியில் போக மாட்டாள். குட்டித்தம்பியரும் இனி வரமாட்டார். அப்படித்தான் அவள் நினைத்தாள். அவ்வாறே நடக்க வேண்டும் என்றும் விரும்பினாள்.
அவள் எல்லோரையும் இழந்துதான் விட்டாள். னாலும் என்ன? எதையும் இழந்துவிடாத நெஞ்சுறுதி. அவளுக்கு அப்படி ஒரு மனப் பயிற்சி எப்படியோ ஏற்பட்டுவிட்டது.

No comments: