Pages

Friday, November 20, 2009

பெண் பாத்திரம் ஏற்று நான் நடித்த நாடகங்கள் பெரும் புகழை ஈட்டித்தந்தன!


நாட்டுக்கூத்து மாமேதை செ.டானியல் பெலிக்கான்


யாழ்பாணத்திலே நாட்டுக்கூத்து கலை மரபுகளைப் பேணிப்போற்றி வளர்க்கின்ற இடங்களுள் ஒன்றாக நாவாந்துறை விளங்குகின்றது. பல நாட்டுக்கூத்து கலைஞர்களையும், புலவர்களையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கித் தந்த பெருமை இக்கிராமத்தைச் சேர்ந்தது.
நாவாந்துறை வடக்குப் பகுதியிலே வசித்து வருகின்ற நாட்டுக்கூத்துக் கலைஞர் அண்ணாவியார் செ. டானியல் அவர்களைச் சந்தித்து அவரது கலை அனுபவங்களையும், அவருக்கு இக்கலையிலுள்ள ஈடுபாடு பற்றியும் அறியும் முயற்சியே இச்சந்திப்பின் நோக்கமாகும்.
கலைக்குடும்பம்
அண்ணாவியார் டானியல் அவர்களைச் சந்திக்க நான் அவரது வீட்டிற்குச் சென்றிருந்த சமயம் அவர் நாடக விடயம் சம்பந்தமாகவே பல கலைஞர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். என்னை நான் முதலில் அவருக்கு அறிமுகம் செய்து கொண்டு வந்த நோக்கத்தையும் தெரிவித்தேன். முகம் மலர வரவேற்ற அண்ணாவியார் கூட இருந்த நாட்டுக்கூத்து கலைஞர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அண்ணாவியார் டானியல் அவர்கள் ஒரு உயர்ந்த கம்பீரமான மனிதர், 62 வயதிலும் நாட்டுக்கூத்தின் மீத தீராத ஆர்வம் உள்ளவராக இருக்கின்றார். இவர் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமல்லாது சிறந்த விளையாட்டு வீரராகவும் யாழ்ப்பாணத்தில் விளங்கியவர். சமூகசேவையிலும் ஈடுபாடு கொண்டவர்.
ஒன்பது வயதிலே முதன் முதலாக ஷஷஏழு பிள்ளை நல்ல தங்காள்|| என்ற பெண் பாத்திரம் ஏற்று நடித்ததில் இருந்து இத்துறையில் ஈடுபாடு கொண்டு உழைத்து வருகிறார். அண்ணாவியார் டானியல் குடும்பம் ஓர் கலைக்குடும்பம். இவரது தந்தையார் திரு. செபஸ்தியாம் பிள்ளை ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞராகவும், இசைப்பிரியராகவும் விளங்கியவர். இவர் தான் தனது மகனுக்கு ஆர்வத்தைக் ஊட்டி, வழிகாட்டி நெறிப்படுத்தியவர். அதன்பிறகு புலவர் சூசைப்பிள்ளை, ஷகலைக்கவி| நீ எஸ்தாக்கி, ஷபுகுந்தான்| ம. ஜோசப் ஆகியோர் இவரது கலை ஆர்வத்திற்கு பக்கத்துணையாக நின்றவர்களாவர். அண்ணாவியார் டானியல் அவர்களது பிள்ளைகளான டானியல் அன்ரனி, டானியல் சவுந்திரன், டானியல் ஜீவா ஆகியோரும் எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், நாடக ஆசிரியர்களாவும் விளங்கி வருகின்றார்கள்.
இவர் ஓர் சிறந்த நாட்டுக்கூத்து கலைஞராக இருந்த போதிலும் எதுவிதமான பெருமையோ, பெருமிதமோ இவரிடம் இல்லை என்பதனை நேரடியாக அவதானிக்க முடிந்தது. இவரது தம்பியார் திரு. எஸ். மைக்கல் ராஜா என்பவரும் சிறந்த நாட்டுக்கூத்துக் கலைஞராக விளங்குகின்றார்.

நடிப்பும் பாட்டும்
அண்ணாவியார் டானயில் அவர்கள் ஈழத்திலே வாழ்ந்து, அத்துடன் தற்பொழுது வாழ்ந்து வருகின்ற புகழ் பூத்த பல அண்ணாவிமார்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவர்களுடன் பல்வேறு நாட்டுக்கூத்துக்களை ஆடி வந்தவர். கொழும்பில் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட ஷஷசங்கிலியன்|| நாட்டுக்கூத்தில் ஷஷபுகுந்தான் ஜோசேப்|| சில்லையூர் செல்வராஜன் போன்றோருடன் நடித்ததை நினைவு கூர்ந்தார். வடபகுதி எங்கும் இவரது நாட்டுக்கூத்துக்கள் மேடையேற்றப் பெற்றன. இலங்கை வானொலியில் இவரது நாட்டுக்கூத்துப் பாடல்கள் ஷஷநாடகமேடைப்பாடல்கள்|| நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வானொலியில் எல்லாமாக ஐந்து நாட்டுக்கூத்துக்கள் ஒலிபரப்பப்பட்டன. அவற்றுள் வீரத் தளபதி செபஸ்தியார், மத்தேஸ்மகிறம்மா, கருங்குயில் குன்றத்தில் கொலை என்பன குறிப்பிடத்தக்கன. இவரது சிறந்த நாட்டுக்கூத்துக்களில் ஒன்றாக செபஸ்தியார் நாட்டுக்கூத்து விளங்குகின்றது. அண்ணாவியார் அவர்கள் செபஸ்தியார் நாட்டுக்கூத்தில் செபஸ்தியாராக நடித்துள்ளார். இதுவே இவரது சிறந்த நாட்டுக்கூத்து எனக் கருதுகிறார். ஒரு கட்டப்பாடல் வருமாறு:
ஷஷகட்டிக்கள்ளி நட்டணையாய்
துட்ட வேடர்தான் - வில்லில்
தொட்டு நெஞ்சை பூட்டி அம்பை
எய்யப் போறாரோ||
இவர் இதை தனது கணீரென்ற குரலில் பாடியபோது நானே இசையில் வசமானேன்.
நமது நாட்டுக்கூத்து மரபுகளைப் பேணுகின்ற நல்நோக்குடன் அவர் தனிப்பட்ட ரீதியிலும், மன்றத்தினூடாகவும் இணைந்து பல வருடங்களுக்கு முன்னர் தமது ஊரிலே உள்ள சென்மேரிஸ் முத்தமிழ் மன்றத்தில் கலையரங்கத் தலைவராக இருந்து அரும் கலைப்பணியாற்றி இருக்கிறார். பல நாடகங்களை சென்மேரீஸ் முத்தமிழ் மன்றத்தின் சார்பாகவும், தனிப்பட்ட வகையிலும் மேடையேற்றி வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அண்ணாவியார் ஷஷஅலசு|ஷ நாட்டுக்கூத்தின் அலசுவாக பாத்திரமேற்று பாடி, நடித்ததை பலர் பாராட்டியுள்ளார்கள்.
அண்ணாவியார் சிறந்த நாட்டுக்கூத்து nநிறப்படுத்துனராகவும், ஒப்பாரிபாடுவதில் சிறந்த இசைஞானம் கைவரப் பெற்றிருக்கின்றார். இவரை நாட்டுக்கூத்து கலையில் ஈடுபடச் செய்வதற்கு காரணங்களில் ஒன்றாக இருந்தது இவருக்கு இயல்பாகப் பாடுகின்ற திறமையே ஆகும். தங்களது ஊரிலே யாரும் இறந்து விட்டால் இரவில் இறப்பு வீட்டிலும் பின்னர் வீட்டில் இரந்து சேமக்காலைவரை ஒப்பாரிப்பாடல்களை பாடுவதாக அவர் கூறினார்.

தயாரிப்பும் நெறிப்படுத்தலும்
அண்ணாவியார் டானியல் அவர்கள் ஏறக்குறைய முப்பத்தைந்து நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார். பல நாடகங்களைத் தானே தயாரித்து, அந் நாடகங்களைத் தானே தயாரித்து, அந் நாடகங்கள் பலவற்றில் முக்கிய பாத்திரங்களை ஏற்றும் நடித்துள்ளார். தற்பொழுது பல நாடகங்களைத் தயாரித்தும், நெறிப்படுத்தியும் வருகின்றார். தற்பொழுது ஷஷஏழு பிள்ளையும் நல்ல தங்காளும்|| என்னும் நாட்டுக் கூத்தையும், பூநகரி குமுளமுனை கலைஞர்களுக்காக ஷஷசஞ்சுவான்|| நாட்டுக்கூத்தையும் நெறிப்படுத்தி வருகிறார். நாட்டுக்கூத்துக் கலையில் கொண்டுள்ள ஆர்வமும் ஈடுபாடுமே தன்னை இத்துறைக்கு மென்மேலும் இட்டுச் செல்ல உதவியது என அவர் கூறினார். இந்நாட்டுக்கூத்து கலை மூலம் எதுவிதமான வருமானத்தையும் எதிர்பாராது ஒரு கலைச் சேவையாகவே இவர் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். நாட்டுக் கூத்துக் கலையை வளர்ப்பதில் அரசினரின் ஆதரவு கிடைப்பதில்லை என வருத்தப்பட்டதுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கலாநிதி சி. மௌனகுரு, கலாநிதி அ. சண்முகதாஸ், கலாநிதி இ. பாலசுந்தரம், கலாநதி இ. சவரிமுத்து அடிகளார் போன்றோர் ஆர்வத்துடன் உழைப்பதை பாராட்டினார்.
அண்ணாவியார் டானியல் அவர்கள் நெறிப்படுத்திய நாடகங்களுள் வேதசாட்சிகள், விஜயமனோகரன், ஜெனோவா, மத்தேசு மசிறம்மா, சங்கிலியன், ஞானசவுந்தரி, கருங்குயில் குன்றத்தில் கொலை, நல்லதங்காள், சஞ்சுவான் என்பன குறிப்பிடத்தக்கன.

நாவாந்துறை கலைஞர்கள்
தனது ஊராகிய நாவாந்துறையில் பல்வேறு கலைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் சிறந்த நாட்டுக்கூத்து தயாரிப்பாளர்களாகவும், புலவர்களாகவும், கவிஞர்களாகவும் இருந்தார்கள். இவர்களது முயற்சியினால் தான்பல நாட்டுக்கூத்துக்கள் இயற்றப்பெற்று, கையெழுத்துப் பிரதிகளாக எழுதப்பட்டிருந்தன. இவர்களது கையெழுத்துப் பிரதிகளைத்தான் தான் பயன்படுத்தி பல்வேற நாட்டுக் கூத்துக்களை தயாரித்தும், நெறிப்படுத்தியும், நடித்தும் வருவதாகக் கூறினார். இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த மூன்று புலவர்களின் நாடகப் பிரதிநிதிகள் தான் தனக்குப் பெரிதும் பயன்பட்டன எனக் கூறினார். அவர்களுள் புலவர் மரியாம்பிள்ளை, புலவர் நல்லையா, அதிபர் கலைக்கவி நீ எஸ்தாக்க ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் என்றார்.
நாட்டுக் கூத்துக்களை பொதுவாக திருவிழாவின் போதும் மற்றும் பொதுவான கொண்டாட்டங்களும் மேமையேற்றுவது வழக்கமாக உள்ளது. வருடத்தின் ஒவ்வொரு ஆவணி மாதத்தில் தான் பரலோக மாதா கோயிலில் வருடாந்த திருவிழா நடைபெறும் இக்காலங்களிலே கோவிலுக்கு முன்பாக அமைந்திருக்கும் மேடையிலே பல்வேறு நாட்டுக் கூத்துக்கள் நடைபெறும். இரவு தொடங்கினால் அடுத்த நாள் காலை வரைக்கும் விடிய விடிய நடைபெறுவது வழக்கம்.
அண்ணாவியாருடைய நாட்டுக் கூத்துக்கள் பல மேடையேற்றப்பட்டன. குறைந்தது ஒரு நாட்டுக் கூத்து எட்டு மணித்தியாலங்கள் வரை நடைபெறும்.

நாட்டுக்கூத்து மாமேதைப் பட்டம்
அண்ணாவியார் டானியல் அவர்கள் நாட்டுக் கூத்திலே பெரும்பாலும் கதாநாயகன் பாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார்.
பெண் பாத்திரங்கள் தாங்கி நடித்த நாடகங்கள் தான் தனக்கு பெரும் பாராட்டைத் தேடித் தந்ததாக கூறுகின்றார். யாழ். மேற்றாசனக் கோயிலின் கட்டிடநிதிக்காக நடாத்தப் பெற்ற எஸ்தாக்கியார் நாட்டுக் கூத்திலே எஸ்தாக்கியாரின் மனைவியாக ஏற்று நடித்தார்.
இவருடைய நடிப்புத் திறனைப் பாராட்டி வண. தியாகுப்பிள்ளை தலைமையில் டாக்டர் பலி அவர்களால் பொன் ஆடை போர்த்திக் கௌரவித்து ஷஷநாட்டுக்கூத்து மாமேதை|| என்ற பட்டத்தையும் வழங்கியமை இவரது திறமைக்கு ஓர் சாட்சியாகும். இவர் பழக்கி நடித்த ஷஷஅலங்கார ரூபன்|| என்ற நாட்டுக் கூத்து அண்மையில் வீடீயோப் படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கூடுதலான இளம் பெண்கள் நடிக்கின்ற ஷஷசஞ்சுவான்|| நாட்டுக் கூத்து இவராலேயே பழக்கப்பட்டு பின்னர் வீடீயோ படமாகவும் தயாரிக்கப்பட்டது.
நாவாந்துறையில் சென்ற வருடம் நடைபெற்ற கலை விழாவிலேயே ஈழத்தின் சிறப்பாக வடபகுதியில் உள்ள மூன்று முதுபெரும் நாட்டுக் கூத்துக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இவர்களுள் அண்ணாவியார் டானியலும் ஒருவராவார். எனையவர்கள் அமரர். அண்ணாவியார் வி.வி. வைரமுத்து, அண்ணாவியார் வின்சன்டிபோல் ஆகிய இருவராவர். இம்முவருக்கும் இவ்வூர் மக்கள் பொன்ஆடை போர்த்தி பொற்கிழி வழங்கிக் கௌரவித்தார்கள்.
-----------------------------------------------------------------------

No comments: