Pages

Thursday, March 04, 2010

உழைக்கும் வர்க்கத்தின் நண்பன்

டொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரியர்)


நண்பன் டானியல் அன்ரனி பிறந்தது நாவாந்துறைப் பிரதேசம். ஒரு சாதாரண உழைப் பாளர் குடும்பத்தில் உதித்தவர் அவர். அந்தப் பிரதேசம் தொழில் சார்ந்த உடலுழைப் புக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகும்.
இவர் இந்தப் பிரதேசத்தில் மூன்று தளங்களில் நின்று தனது செயல்பாட்டை தொடாந்து நடத்தி வந்தார். ஒரு தளம் சமூக முன்னேற்றம். இன்னொரு தளம் விளையாட்டுத் துறை. பிறிதொரு தளம் இலக்கியக் களம். இவை மூன்றையும் தனது ஆளுமையைக் கொண்டு செழுமைப்படுத்தி வந்துள்ளார்.
இலக்கியப் பாதையை இவர் தெளிவாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டார். எதிர்கால இலக் கியப் போக்கு உழைப்பாளி மக்களின் இதயக் குரலை எதிரொலிக்க வேண்டும். அதுதான் நிலையான ஆக்க இலக்கியக் கோட்பாடாக அமையும் எனத் திட்டமாகவே நம்பி, கடைசி வரையும் அதன் ஊடாகவே செயற்பட்டு வந்துள்ளார்.
தான் பிறந்து வளர்ந்த நாவாந்துறையையும் அங்கு உழைத்து வாழும் மக்களையும் அவர் மறக்கவேயில்லை. கடைசி வரையும் நேசித்தார். தனது படைப்புக்களில் கூட,அந்தப் பிர தேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை அபிலாஷைகளைத் தான் அடிச்சாரமாகக் கொண்டு படைத்தார். அந்தப் பிரதேசத்து மக்களின் வாழ்க்கைச் சிரமங்களை,கஷ்டங்களை, முர ண்பாடுகளை முன்நிறுத்தி,அவர் சிருஷ்டித்த இலக்கியங்கள் நூலுருப் பெற்றுத் திகழ்கின்றன.
ஓயாமல் உழைத்தவர் அவர் தனது பிரதேசத்து மக்களின் சிரமங்களைக் குறைக்க இடை விடாது பாடுபட்டவர். இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நாவாந்துறையை முன்னேற்ற வேண் டும் என அடிகடி கூறிவந்த இவர் அதற்கு முன் உதாரணமாக தானே முன்நின்று உழை த்து வழிகாட்டியவர். உழைப்பவர்கள் உணர்ந்து முன்னேற வேண்டும் என்பதே இவரது இதய தாகமாகும்.
படைப்பாளியாக இருந்த இவர் காலக்கிரமத்தில் ஒரு சஞ்சிகையின் ஆசிரியராகவும் பரிண மித்தார். “சமர்” என்ற சஞ்சிகையை இவர் ஆரம்பித்து நடத்திய போது தான் பலர் இவரை ஆச்சரியம் கலந்த பார்வையுடன் திரும்பிப் பார்க்கத் தொடங்கினர். சொற்ப காலம் தான் “சமர்” சிற்றிலக்கிய ஏடு வெளிவந்தது. அந்த சொற்ப காலத்துக்குள்ளேயே “சமரின்” இல க்கிய வீச்சுப் பலரால் பின்னர் வியந்து பேசப்பட்டதாகும். “சமரின்” இலக்கியப் பார்வை ஒரு புதிய பரபரப்பையே இந்த மண்ணில் ஏற்படுத்தி விட்டது. தரமான இலக்கிய விமர்சகர்கள், எழுத்தாளர்கள் எல்லோரும்”சமரில்” தமது எழுத்துக்களைப் பதிய வைத்துள்ளனர்.
டானியல் அன்ரனி தோழமையுடன் பழகத்தக்கவர். அதிலும் எழுத்தாளர் என்றாலே இவரது பழகும் தன்மை கனிவு நிறைந்தவையாக அமையும். கடைசி வரையும் மக்கள் தொண்ட னாகவே வாழ்ந்து மறைந்தவர் இவர். இவரிடம் ஒளிவு மறைவு என்பதே கிடையாது. மன சில் பட்டதை வெகு இயல்பாக வெளியே சொல்லிவிடும் தன்மை நிறைந்த இவரிடம் தெ ளிவான கருத்து நிலை இருந்தது. அந்தக் கருத்து நிலை இவரது படைப்புக்களில் வெகு வாகத் தெரிந்தது.
இவரது படைப்புக்களில் ஒரேயொரு நூல் தான் வெளிவந்துள்ளது. இவரது முழு ஆளு மையையும் நாம் புரிந்து கொள்வதற்கு இது மாத்திரம் போதாது. அவரது சிருஷ்டிகள் முழுவதும் நூலுருப் பெறும் போது தான் டானியல் அன்ரனியின் முழுக்கருத்து ஆளுமையும் உழைக்கும் மக்களுக்குப் புரியும்.

No comments: