Pages

Thursday, April 22, 2010

இரவு எரிந்து கொண்டிருக்கிறது

-டானியல்ஜீவா-

எங்கையோ
வெறித்துக் கொண்டிருக்கிறது
என் கடந்த கால
காயங்களுக்கான
மன்னிப்பு.

என் பார்வையின் மீது
வாழ்கையின் எரிச்சல்ககோடு
தீப்பிடித்து
எரிந்து கொண்டிருக்கிறது

என் இரவுகளில்..
உறக்கமற்று அலையும்
கனவுகளில்;
தீர்ந்து போகாத
விரக்தி
கால் முளைத்து
மரண வாசனையுடன்
என்னைக் கடந்து
செல்லும்.

வெளிச்சக்கோடு
இருட்டாயும்
பெரும் காட்டின்
அடர்ந்திருக்கும் இருள்
ஒளியாகவும்
ஏன் முரண்பட்டு
என் உயீர்க்கூடு
சுமக்கிறது..?

என்னிடம்
எதுவும்மில்லாத போதும்
சாவின் வலி மட்டும்
நீண்டு..
மீண்டும் மீண்டும்
உறை நிலையில்.

விளங்கிக் கொள்ள முடியாத
வாழ்க்கைக்குள்
எத்தனை முடிச்சுகள்
அவிழ்ந்தும் அவிழாமலும்.

நான் கண்ணீராய்
கரைந்து
மெல்ல மெல்ல
தீர்ந்து போகிறேன்.
--------
நன்றி:கூர்2010

No comments: