Pages

Sunday, December 04, 2005

பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன...

நாவாந்துறைடானியல் அன்ரனி
மதியம் கடந்து விட்டது. அப்படியிருந்தும் வெயில் தணியவில்லை. சவிரிமுத்தர் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார். அவருடைய கையில் ஒன்று வழுக்கை விழுந்த தலையில் இருந்தது. முன்னோக்கிப் பெருத்திருந்த தொந்தி பெருஞ்சுமையாகக் கனக்க மூச்சு இரைக்க இரைக்க பிரதான ஒழுங்கையில் திரும்பினார். எதிரே ஜீப் வண்டியொன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. ஜீப்பைக் கண்டதும்

மரநிழலில் ஒதுங்கும் பாவனையில் கானோரத்தில் நின்ற பூவரச மரத்தடியில் நின்று கொண்டார்.

ஜீப் வண்டி அவரைக் கடந்து எதிர்த்திசையை நோக்கி வேகமாக விரைந்து கொண்டிருந்தது. கடந்து செல்லும் வேகத்திலும் கூட சவிரிமுத்தர் அவனைப் பார்த்து விட்டார்.

இரு பொலிஸ்காரர்களுக்கிடையில் பெருமாள் இருந்துகொண்டிருந்தான். அவனுடைய பெரிய கண்கள் சவிரிமுத்தரைக் கண்டு கொண்டதும் எதையோ அவசரத்துடன் கேட்க எத்தனிக்கும் வேளையில் வண்டி வெகுதூரம் சென்றுவிட்டது.

அவனுடைய கண்கள். அவை பார்த்த பார்வை. சவிரிமுத்தரின் மனதில் ஏதோ ஒரு உறுத்தல்.உடலில் ஒரு கணசிலிர்ப்பு. இனம்புரியாத இரைச்சல்கள். சோர்வுடன் நடந்தார்.

ஒழுங்கை நிறைய சனங்கள். படலை வாசல்களிலும் வேலிகளுக்கு மேலாலும் இன்னும் பலர். ஜீப் வண்டி சென்ற திசையை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களுக்குள் எதையோ பேசி விமர்சித்துக் கொண்டு அனுதாபப் பட்டுக்கொண்டிருந்தனர். எதையுமே கண்டுகொள்ளாதவராக சவிரிமுத்தர் நடந்து கொண்டே இருந்தார்.

வெய்யிலில் நடந்து வந்த களைப்பில் உடம்பு வேர்வையால் நனைந்திருந்தது.
அணிந்திருந்த மேற்சட்டையை களைந்து போட்டுவிட்டு சரு சருவென சடைத்து ரோமங்கள் வளர்ந்திருந்த வெறும் உடம்பை ஆசுவாசத்துடன் அங்கிருந்த ஈசிச்செயரில் சாய்த்துக் கொண்டார்.

கழுத்தில் இரட்டை வடம் சங்கிலி கனத்தது. விரல்களில் கற்கள் பதித்த மோதிரங்கள்.கருங்காலித் தடிக்கு ப10ண் போட்டது போல் மினுமினுத்துக் கொண்டிருந்தன.

ஆனாசி... ஆனாசி.... இவன் செல்லையா வந்தவனோ?

சவிரிமுத்து போட்ட சத்தத்தில் குசினிக்குள் இருந்தவள் வெளியே வந்தாள்.

ஏன் இப்பிடி சத்தம் போடுறீங்க. இப்பதான் அவன் கொண்டுவந்து வச்சிற்றுப் போறான். சாருக்குள்ளதான் இருக்கு...

அதை எடுத்துக் கொண்டு வா....

ஆனாசி விசுக்கென்று சாருக்குள் சென்றாள். வரும்போது அவள் கையில் இருந்த போத்தல்களில் கள் நிரம்பியிருந்தது. சவிரிமுத்தரின் காலடியில் வைத்துவிட்டு இவள் மறுபடியும் குசினிக்குள் போய்விட்டாள்.

சவிரிமுத்தர் கோப்பையில் சிறிது கள்ளை வார்த்து பக்கத்தில் வைத்துவிட்டு புகையிலையைக் கிழித்து சுருட்டத் தொடங்கினார். அவருடைய சிந்தனை எதிலோலயித்திருந்தது.

என்னங்க ஒரு விஷயம் கேள்விப் பட்டீங்களோ. நம்மளோட தொழிலுக்கு நிண்ட பெருமாளையல்லோ பொலிஸ்காரங்கள் பிடித்துக்கொண்டு போறாங்க. குசினிக்குள் இருந்து ஆனாசியின் சத்தம் கேட்டது.


நானும் வழியில பார்த்துக் கொண்டுதான் வாறன். என்ன நடந்ததாம்.... சவிரிமுத்தர் உணர்ச்சியின்றிப் பேசினார்.

அவன் கள்ளத் தோணியெண்டு யாரோ பொலிசுக்கு பெட்டிசம் போட்டிட்டாங்களாம். அதுதான் அவனை

வந்து இழுத்துக் கொண்டு போறாங்கள். ஏனெண அவன இனிமேல் விடமாட்டாங்களா....

ஆனாசி வெளியே வந்து சவிரிமுத்தருக்குப் பக்கத்தில் நின்று கொண்டாள். சவிரிமுத்தர் மனைவியை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார். மௌனமாக கோப்பையிலிருந்த கள்ளை எடுத்து ஒருதடவை உறிஞ்சினார். அந்த மூச்சிலே கோப்பை முழுவதும் காலியாகி விட்டது.

ஆனாசிக்கு அதிசயமாக இருந்தது. இவ்வளவு பெரிய செய்தியைச் சொல்லியும் புருஷன் அக்கறைப் படுத்துவதாக தெரியவில்லை.

ஏனெண உங்களுக்கு பொலிசில இருக்கிற பெரியவங்களத் தெரியுந்தானே. ஓருக்காய்ப் போய் என்னெண்டுதான் பாத்திட்டு வாங்கோவன்....

சவிரிமுத்தர் மறுபடியும் கள்ளை வார்த்து ஒரு முறடை உறிஞ்சி விட்டு கள்ளில் தோய்த்து விட்ட பெரிய மீசையை தடவி விட்டுக் கொண்டார்.

பேச்சி இதுகள் ஒண்டும் உனக்கு விளங்காது. என்னமாதிரித்தான் தெரிஞ்சவங்களெண்டாலும் லேசில இந்தமாதிரி விசயங்களை விடமாட்டாங்கள்.

ஆனாசி அதற்கு மேல் எதுவும் பேசாமல் போய்விட்டாள். சவிரிமுத்தர் சுற்றிவைத்திருந்த சுருட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தார். ஆனாசி கேட்டதற்காக ஏதோ சொல்லி வைத்தார். ஆனால் அவருடைய மனதில் பெருமாளின் விடயம் உறுத்திக் கொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டார்.

சவிரிமுத்தருக்கு நன்றாக நினைவிருந்தது. பத்து வருடங்களுக்கு முன் ஒரு வெள்ளிக்கிழமையாய் இருக்கவேண்டும்.... தோணிக்காசுக்கு கொழும்புத்துறைக்குப் போவதற்காக யாழ்ப்பாண பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுதுதான் பெருமாளை சந்தித்தார்.

அவனுக்கு அப்போது பத்து வயதிருக்கும். கறுத்த மேனி. ஊதி மினுமினுப்புடன் இருந்த வயிறு. சிக்குப் பிடிக்காத தலைமயிர். காவி படிந்து முன்னோக்கி மிதந்து கொண்டிருந்த பற்கள். பெரிய கண்கள். பீத்தல் விழுந்த துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு பஸ் கிய10வில் நின்றவர்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அவனைக்கண்டதும் சவிரிமுத்துக்கு ஆனாசியின் நினைவு வந்தது. வெகுநாட்களாகவே வீட்டு வேலைக்கு ஒருவர் வேண்டுமென்று நச்சரித்துக் கொண்டிருந்தாள். இவருடைய வலைக்கும் ஆள் பற்றாக்குறையாக இருந்தது.

~தம்பி.... இஞ்சால உன்னத்தான். இஞ்ச வா....

பெருமாள் திரும்பிப் பார்த்தான். அவன் முகத்தில் என்ன வென்று விரித்துரைக்க முடியாத பாவம். அவன் சவிரிமுத்தர் அருகே வந்தான்.

~தம்பி உன்ரை பேரென்ன...

~பெருமாளுங்க...

~எந்த ஊர் மோன உனக்கு

~பதுளையிங்க...

~அப்ப வாச்சுப் போச்சு என்று

மனதிற்குள் நினைத்தபடி சவிரிமுத்தர் தொடர்ந்தார்.

~அப்பா.... அம்மா.... இல்லையோ?

~அப்பா.... செத்துப் போட்டாரு. அம்மா தங்கச்சி தோட்டத்திலே வேலை செங்சிக்கிட்டு இருக்கிறாங்க..

~ஏன் உனக்குத் தோட்டத்திலே வேலை செய்யப் பிடிக்கேல்லையா?

~என்னோட வீட்டுக்கு வாறியா...? உனக்கு சாப்பாடு தந்து உன்ர வீட்டுக்கும் காசு அனுப்பிறன்

- தயக்கம்.

~ம்... சொல்லன்

சரியிங்க....

அவன் சம்மதித்து விட்டான்.

பெருமாள் வீட்டுக்கு வந்த போது சம்மாட்டி சவிரிமுத்து சாதாரண சவிரிமுத்துவாகத்தான் இருந்தார். பெருமாள் வீட்டில் எடுபிடி வேலைகளைக் கவனித்ததுடன் வலையில் பிடித்து விற்றதுபோக ஐஸ் போட்டு வைத்தல் போன்ற வேலைகளையும் கூட இருந்து செய்வான்.

அந்தத் தெருப்பிள்ளைகள் எல்லாரும் அவனுக்குச் சினேகிதர். அவனுடைய வயதுக்கு மூத்த அனுபவ அறிவும், அதனால் அவன் பேசும் பெரிய விசயங்களையும் ஆச்சரியத்துடன் கேட்பார்கள், கூட விளையாடும் சிறுவர்கள். எப்போதாவது அவர்களுக்குள் சண்டை மூழும். அவனைப் பார்த்து ~கள்ளத்தோணி என்று பட்டம் சொல்லுவார்கள். ஆனால் அவன் அந்த வார்த்தையின் அர்த்தத்தைப்புரிந்து கொள்ளாதவன் போல உண்மையில் அவனுக்குப் புரியாமல் கூட இருக்கலாம்.- பேசாமல் இருப்பான். ஆனால் ~கரிக்கோச்சி என்று மட்டும் அவனை யாரும் பேசி விட்டால் போதும் கோபம் தலைக்கேற, மூர்க்கத்துடன் - சொன்னவனை வளைத்துப் பிடித்து முதுகில் ஒரு அறை கொடுக்காமல் அடங்கமாட்டான். பற்களை ~நறநற வெனக் கடித்துக் கொண்டு பெரிய விழிகளைப் பயங்கரமாக உருட்டுவான். வாயில் வந்த து}சண வார்த்தைகளை எல்லாம் கொட்டிக்கொள்வான். சிலவேளைகளில் துண்டு பீடிகளைப் பொறுக்கி வீட்டுக் கொல்லைப் புறத்தில் நின்று குடிப்பதைச் சவிரிமுத்தர் கண்டிருந்தாலும் எதுவும் சொல்லுவதில்லை. ஏதாவது ஏசினால் ஓடிப் போய்விடுவான் என்றபயம். அவருக்கு அவனது சுறுசுறுப்பும் பிடித்திருந்தது.

சிலநாட்களில் பெருமாள் சவிரிமுத்துவுடன் கடலுக்குப் போகத் தொடங்கி விட்டான். தோணியில் பெருமாள் கால் வைத்தவேளை ~விடுவலையில் கயல் மீன்அள்ளிச் சொரிந்தது. சில வருடங்களிலேயே சவிரிமுத்து பல லட்சம் பெறுமதியான தோணிகளுக்கும், நைலோன் வலைகளுக்கும் அதிபதியாகி ஊரில் பெரிய சம்மாட்டி ஆகிவிட்டார்.

மலைப்பாறையில் பிறந்து கடல் உவரில் ஊறிய பெருமாளின் உடல் உருண்டு திரண்டு தசைக்கோளங்கள் புடைத்து நிற்கும் பருவத்தை எட்டிவிட்டான் பெருமாள் அவன் உழைத்த பத்து வருடங்களிலும் வயிறு நிறையச் சாப்பாடு. ஒரு நாளைக்கு இரண்டு கட்டு பீடி, ஞாயிற்றுக் கிழமைகளில் சினிமா பார்க்கக் காசு ... இவைதான் அவன் உழைப்புக்குக் கிடைத்தவை.

பத்து வருடங்களாக தாய் சகோதரியை காணாமல் மறந்திருந்த பெருமாளுக்கு சில நாட்களுக்கு முன் திடீரென ஏனோ ஊருக்கு போக வேண்டுமென்று மனம் பேதலித்தது. வேட்கை கொண்ட மனதின் விருப்பத்தை சம்மாட்டியாரிடம் வெளியிட்டு, ஐநு}று ரூபா காசு கேட்டான். சுரண்டிப் பிழைத்து சொகுசு அனுபவித்துப் பழக்கப்பட்டுவிட்ட சவிரிமுத்துவுக்கு இது பேரிடியாகிவிட்டது. பெருமாள் செய்யும் வேலையின் பழு, அவனை இழந்தால்... அவன் திரும்பிவராவிட்டாலும்...? அதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. இதனால் பல நாட்களாக கடத்தி வந்தார்.ஓவ்வொரு நாளும் பெருமாளின் ஊமை முணுமுணுப்பு இரைச்சலாகி வெடித்தது. ஒருநாள் ஊதியம் எதுவுமின்றியே வெளியேறிவிட்டான்.

அடுத்த நாள் சவரிமுத்துவின் பரம விரோதி பேதுருவின் நைலோன் வலையில் சேர்ந்து விட்டான் என்ற செய்தியை சவிரிமுத்து அறிந்தபோது அதிர்ந்தே போய் விட்டார்.

- அந்தப் பெருமாள் இப்பொழுது பொலிசில்.

~என்ன சம்மாட்டியார் கனக்க யோசிச்சுக் கொண்டிருக்கிறீங்க.

அப்பொழுதுதான் வாசல் படியைத் தாண்டி வந்து கொண்டிருந்த குத்தகைக்காரன் யோணின் இன்னொரு கோப்பைக்குள் ஊற்றி அதைக் குத்தகைக்காரனிடம் நீட்டினார். ... ....


~என்ன வி~யம் குத்தகை... இந்த மத்தியான நேரத்தில சவிரிமுத்து வினவினார்.

~ஒண்ணுமில்லை சம்மாட்டியார்... நேற்று சுவாமியார் கூப்பிட்டு இந்த முறை பெருநாள் நல்ல முறையில கொண்டாட வேணும் எண்டு சொன்னார்.

~ஓ... அதுக்கென்ன... சிறப்பாகச் செய்வம்....

சொல்லிக் கொண்டே சவிரிமுத்து கோப்பை முழுவதையும் காலி செய்துவிட்டு, மறுபடியும் கோப்பையை நிரப்பினார்.

குத்தகைக்காரர் மீண்டும் தொடர்ந்தார்.

~இந்த முறை வழமைபோல் கோயில் சோடினைகள், வெடி, மத்தாப்பு எல்லாம் உங்க பொறுப்பு.... குத்தகைக்காரர் இப்போது தானே போத்தலை எடுத்து நிரப்பிக்கொண்டார்.

~அதுக்கென்ன இந்தமுறை வாற ஒரு கிழமை உழைப்பை அப்படியே ஒதுக்கிவிடுறன்.

கோப்பையை நிரப்புவதும் வெறுமையாக்குவதுமாய் சில நிமிடங்கள். சவிரிமுத்துவுக்கு சற்று ஏறிவிட்டது. குத்தகைக்காரர் நிதானத்துடன் பேசினார்.

~ஒரு விஷயம் கேள்விப்பட்டியளோ... உங்களை விட்டுப்போட்டு பேதுருவட வலைக்குப்போன அவன் தான்... பெருமாள், அவனைக் கள்ளத்தோணியெண்டு பெட்டிசம் போட்டு பொலிசட்டைப் பிடிச்சுக் கொடுத்துப் போட்டாங்களாம் ஆரோ... ~ஓம் ஓம்... நானும் வழியில பாத்தன். பாவம் பெருமாள். நல்ல பெடியன். சவிரிமுத்து அரைமயக்கத்துடன் அனுதாப வார்த்தைகளைக் கொட்டினார்.

~அப்ப நான் வரப்போறன் சம்மாட்டி என்று கூறிக்கொண்டே குத்தகைக்காரர் எழுந்து மெதுவாக நடந்தார்.

சவிரிமுத்து ஒரு நமட்டுச் சிரிப்புடன் அண்ணாந்து பார்த்தார். பருந்துகள் எதையோ தேடிப்பறந்து கொண்டிருந்தன.
முற்றும்.

இழப்பு நாவாந்துறை டானியல் அன்ரனி



கருக்கலின் மென் இருட்டு. கனத்த மௌனத்தைக் கிழித்துக் கொண்டு காகக்கூட்டங்கள் கத்தின. தெரு நாய்கள் ஊளையிட்டன. எங்கேயோ பட்டமரப் பொந்திலிருந்து கிளிக்குஞ்சு ஒன்று எதையோ பார்த்துப் பயந்து கீச்சிட்டுக் கத்தியது.
சரசுவுக்கு விழிப்புக் கண்டது. கண்ணுக்குள் என்னவோ உருளுவது போல் கச....முசவென்று எ£¤ந்தது. தேகம் முழுவதும் அடித்துப் போட்ட சோர்வு. கிடுகு வா¤ச்சுக்களால் பகல் உள்ளே வந்தது.
“அதுக்குள்ள விடிஞ்சு போச்சா....” அவள் அலுத்துக் கொண்டாள். எப்போதும் அவளுக்கு அப்படித்தான், து£க்கத்திலிருந்து எழுந்து கொள்வதே பெரும் கவலைபோல, நேற்று அம்மன் கோயில் கடைசித் திருவிழா. ஸ்பீக்கரும் சினிமாப்பாட்டும் அந்த அயல் முழுவதும் கலகலத்துப் போயிருந்தது. இரவு வழமைபோல் குட்டித் தம்பியின் சங்கிலியன் கூத்து. திருவிழாவின் உச்சம். இரவு முழுவதும் வெற்றிலையைப் போட்டு அரைத்துக் கொண்டே கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்துவிட்டு சற்று நேரத்திற்கு முன்தான் தனது பா¤வாரங்களுடன் வந்து படுக்கையில் சா¤ந்திருந்தாள் சரசு.
குட்டித் தம்பியா¤ன் பாட்டு இப்பொழுதும் காற்றினில் கிணு....கிணுத்தது. முகம் கூட முன்னுக்கு வந்து கண்ணுக்குள் நின்றது. சரசுவுக்கு அப்படி ஒரு பி£¤யம் அவன் பாட்டில்.
அவள் எதையோ நினைத்தாள். எதற்காகவோ சி£¤த்தாள்.
“ஊ£¤ல் உள்ளவர்களெல்லாம் என்னமோ....என்னமோ.... எல்லாந்தான். வாயிலை வச்சுப் பேசுறாங்க. அது என்ன இழவோ.... அப்படி ஒரு பிரியம் எனக்கு....என்ர புருசனில் வச்சிருந்தமாதி£¤.”
பக்கத்திலே குழந்தை முலைக்காம்பைச் சப்பியபடி உறங்கிப்போயிருந்தது. அதன் கடைவாயைத் துடைத்துவிட்டு சட்டையை இழுத்துச் சா¤செய்து கொண்டே எழுந்தாள். குழந்தையின் மூத்திரத்தால் சேலை நனைந்திருந்தது. பிழிந்துவிட்டுக் கொண்டாள். கிழியல் இல்லாத பக்கமாக புரட்டிப் பார்த்து சீராக உடுத்துக் கொண்டாள். “எடி....பொன்னு....எழும்படி....நல்லா நேரம் போட்டுது....”
பொன்னுவை எழுப்பினாள். அவள் என்னென்னவோ முணுமுணுத்தாள். பக்கத்தில் கிடந்த சின்னவள் தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மறுபக்கம் திரும்பி சா¤ந்து கொண்டாள். நாகராசா, சின்னராணி மூலைக்கு ஒருத்தராய் முறுகிப் போய்க் கிடந்தனர்.
“எடி, எழும்படியென்றால்.... அங்கால பார் எல்லோரும் அவதிப்பட்டு ஓடுகினம். எழும்பு புள்ள....”
“போண....நான் இண்டைக்குப் போகல.... உம்.... உம்....”
“ஏனடி புள்ள.. திங்கட்கிழமையும் அதுவுமா.... பிழைப்புக் கிடைக்கிற நாளில.... சுறுக்கா எழும்பி வெளிக்கிடு....”
“ஒரே அலுப்பா இருக்குதண. இராவுக்கும் ஒண்டும் தரேல்ல. எனக்குச் சா¤யாகப் பசிக்குது....”
பொன்னு அழுதுவிடுவாள் போலிருந்தது. சரசுவுக்கு நினைவு இருந்தது. மத்தியானம் பாண் வாங்கிக் கொடுத்தது. அதற்குப் பின் இரவு! இரவு என்ன? முடிச்சில் கூத்துச் செலவுக்கு என்றே பிடித்து வைத்திருந்த ஒரு ரூபாக்குத்தி. அது கடலை வாங்கிக் கொடுத்ததோடு சா¤. கூத்து ரசிப்பில் எல்லாவற்றையும் தான் மறந்து விட்டாள்.
“என்ர குஞ்செல் ல....நீ போனால்தானடி நான் அடுப்புப்பத்த வைப்பன்.... நான் புள்ளைக்கு விசாலாட்சிக் கிழவி வந்தோடன கிழங்கும் சம்பலும் வாங்கி ஒருத்தருக்கும் குடுக்காம ஒழிச்சு வைப்பன்....”
“....உம் இப்பிடித்தான் நேத்துக் காலம் புறமும் சொன்னனி”
“என்ர வைரவராணை வேண்டி வைப்பன்”.
சரசு தலையில் தொட்டு வைத்தாள். பொன்னு மறுபடியும் அம்மாவை நம்பினாள். எழுந்து பாயில் குந்திக்கொண்டாள். சிக்குப் பிடித்த தலையை பற....பற....வென்று சொறிந்தாள். மறுபடியும் கண்களை மூடினாள். மீண்டும் விழித்தாள்.
சரசு குடிசை வாசலுக்கு வந்தாள். சோளகம் பிய்த்து வாங்கியது. முகட்டுக் கிடுகுகள் வா¤சைவிட்டு எம்பி....எம்பிக் குதித்தன. அப்படி ஒரு வேகம், இப்படித்தான் ஒரு நாள் சோளகம் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தபோது கணபதி இவளைத் திட்டிக் கொண்டே வடக்குப் பக்கமாகப் போனான். காற்றில் இரைச்சலுக்குள் அப்படியே அமுங்கிப் போனதில் இவளுக்கு எதுவும் கேட்கவில்லை.
அவன் அதற்குப்பின் இந்தப் பக்கமே வரவில்லை. கணபதி “வகுப்புத் தொழில்”தான் செய்து வந்தவன். அலுப்பாந்திக்கு வரும் வத்தைகளிலிருந்து மூடைகளை இறக்கி ஏதோ நாலு காசு சம்பாதிக்கச் செய்தான். மாட்டுடன் வண்டில் ஒன்றை வாங்கினான். அதற்குப் பின்தான் ஏனோ நிறையக் குடிக்கத் தொடங்கினான்.
இரவில் வருவான். நிறைவெறியில் மூர்க்கத்தனமாக சரசுவை அடிப்பான். அவளும் ஏதாவது கையில் கிடைத்தால் எறிந்து தனது இயலாமை, த்திரம் எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்வாள். பிள்ளைகள் கூக்குரல் வைக்கும். கணபதியை அறிந்த அயலவர்கள் ஏன் வரப்போகிறார்கள்? அடுத்த நாளும்....அதற்கு அடுத்த நாளும்....தாக்குதல்கள், தற்காப்புத் தாக்குதல்கள்....கூக்குரல்கள் தொடரும்.“போடா வேசயடமோனே.... விட்டுவிட்டுப் போடா குடிகார து£மமோன்....போடா....” இது சரசுவின் வாய்ப்பாடு.
கணபதி பலமுறை விட்டுவிட்டுப் போனவன்தான். தொடர்ந்து இரு இரவுகள் எப்படியோ எங்கேயோ கழித்து விடுவான். அப்புறமாக சமரசம் நடந்து கொள்ளும். இவ்வளவு அமளிக்குள்ளும் சரசு நசுக்கிடாமல் ஜந்தைப் பெற்றுப் போட்டுவிட்டாள்...
இந்த முறை கணபதி திரும்பவில்லை. ஒருநாள், இரண்டு நாள், ஒருவாரம்.... ஒரு மாதம், ஒரு வருஷம்....அவன் திரும்பவேயில்லை. இது சரசுவிற்கு ச்சா¤யமாகத்தான் இருந்தது. அவனுடைய “சா¦ரபலவீனத்தை” அறிந்து வைத்திருந்த அவளுக்கு அவனுடைய வைராக்கியம் ஒருவிதத்தில் அதிர்ச்சியாகக் கூட இருந்தது. அவளுக்கும் அப்படித்தான். ஒருநாள்.... இரண்டு நாள், ஒருவாரம்....ஒரு மாதம்.... ஒரு வருஷம்....அப்புறம் கணபதி என்ற “மனிதனை” மறந்தே போய் விட்டாள். அதற்காக துக்கப்படுவதையும் நிறுத்திக் கொண்டாள்.
சில நாட்களுக்கு முன்தான் குட்டித் தம்பியர் கதைவாக்கில் சொல்லி வைத்தார். கணபதி காங்கேசன் துறைக்கு வரும் கப்பல்களிலிருந்து மூடை இறக்குகிறானாம். அங்கேயே குடியும் குடித்தனமும் மறுபடியும் கிப் போய்விட்டதாம்.
காற்று ஒரு கணம் சுழன்றது. பக்கென்று மண்ணைத் து£வி முகத்தில் அடித்தது. சரசு கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
து£ரத்தில் வயல் வெளி தொ¤ந்தது. கூத்துக் கொட்டகையை நின்று சிலர் பி£¤த்துக் கட்டிக் கொண்டிருந்தனர். குட்டித்தம்பியரும் சிலவேளை அங்குதான் நிற்பார்.
குட்டித்தம்பியர் களையானவர், காசு உள்ளவர், வெற்றிலையும் வாயுமாய் எல்லோருடனும் சி£¤க்கச் சி£¤க்கப் பேசுவார். ராசகூத்துக்கு குட்டித்தம்பியரை அசைக்கவே முடியாது. பாட்டு அப்படி. வேஷப்பொருத்தம் அப்படி. அவருடைய இளைய பெண்ணுக்கு மூன்று பிள்ளைகள். இப்படி எல்லாம் இருந்து கொண்டும்தான் சரசுவிடம் வந்து போய்க் கொண்டிருந்தார் குட்டித்தம்பியர்.
பக்கத்துக் குடிசைகளிலும் உரத்த பேச்சுக்குரல். கடற்கரைக்குப் போவதற்கு பலர் யத்தமாகிக் கொண்டிருந்தனர்.
பொன்னு வேலி மூலைக்குள் “ஒண்டுக்கு” குந்திக் கொண்டிருந்தாள். சரசு கூரைக்கு மேல் காயப்போடடிருந்த உமலை எடுத்தாள். ஏற்கனவே கிழிந்து போயிருந்த மூலைகள் இன்னும் பொ¤தாகியிருந்தன. ஓலை எடுத்து கிழிவுகளைப் பொத்திப் போடவேண்டும் என்று நேற்று நினைத்திருந்தவள், திருவிழாச் சந்தடியில் மறந்தே போய்விட்டாள்.
உமலை வி£¤த்துப்பார்த்தாள். செதில்களும் செத்த குஞ்சுமீன்களுமாய் வெடில் பக்கென்று மூஞ்சியில் அடித்தது. வயிற்றைக் குமட்டுவது போல்.
பொன்னு இப்போ பானையைத் துளாவிக் கொண்டிருந்தாள். ஏதோ சொட்டு நீர் கைகளை நனைத்தது. முகத்தில் தடவிக் கொண்டாள். கண் பீளையையும், எச்சில் காய்ந்திருந்த கடைவாயையும் பாவாடையால் துடைத்துக் கொண்டாள். அந்தப் பாவாடை எப்படியெல்லாமோ கிழிந்து போயிருந்தது. மேல் உடம்பில் அம்மாவின் பொ¤ய சட்டை தொள தொளவென்றிருந்ததை இறுக்கி, வயிற்றுடன் முடிந்திருந்தாள்.
சரசு அவளுடைய தலையைக் கையால் நீவிவிட்டாள். அழுக்குத்துண்டு ஒன்றினால் மயிரைச் சேர்த்து சிலும்பாமல் கடடிவிட்டாள்.
“அம்மா எனக்கு....ஒரு சட்ட தைச்சு தாவண.... இதத்தானே நெடுகிலும் போடுறன். கடற்கரைக்கு வாறபொடியன் எல்லாம் எனக்கு நொட்ட சொல்லிகினம்....”
“பொறு புள்ள, சின்னாச்சி அக்காவோட நான் சீட்டு பிடிச்சிருக்கிறன். விழுந்தோடன உனக்கு சீத்தையில ஒருகவுண் தச்சுத்தருவன்....”
பொன்னு உமலைத் து£க்கிக் கொண்டாள். எப்போதாவது இவளோட கூடிப்போற சின்னவியும் எழுந்து வந்துவிட்டான்.
“கவனம் புள்ள....காத்துக்குள்ள....கார் வாறது கூடக்கேக்காது....சின்னவிய கவனமாக கையில புடிச்சுக் கூட்டிக்கொண்டு போ....”
அவர்கள் போய்விட்டார்கள். இவள் பெருமூச்சு விட்டுக்கொண்டே உள்ளே வந்தாள். குழந்தை அழுது கொண்டிருந்தது.
மூலையில் விளக்கு சா¤ந்து கிடந்தது. அதை எடுத்து நிமிர்த்தி வைத்தாள். தீப்பெட்டியை உரசிக் கொளுத்தினாள். சடக்கென்று ஒளி நிமிர்ந்தது. அத்துடன் பக்கென்று மறுபடியும் அணைந்தது.
இப்போது குழந்தை இன்னும் வீறிட்டது. தேநீராவது வைக்கலாம் என்று நினைத்தவள், புஸ்பராணியைத் தேடினாள், அங்கு ஒருவருமே இல்லை. அந்த விடிகாலையிலேயே.... எங்கேயோ ஓடிவிட்டனர். எங்கே போவார்கள். கடற்கரை குப்பை மேட்டில் எதையாவது பொறுக்கிக் கொண்டிருப்பார்கள்.
அவள் வெளியில் வந்து குரல் கொடுத்தாள்.
“எடி புஸ்பராணி....இங்க வந்து புள்ளையைத் து£க்கி வைச்சிரடி....”
வெகு அண்மையில் ஏதோ பாட்டின் முணுமுணுப்புக் கேட்டது. குட்டித்தம்பியர்தான் வந்து கொண்டிருந்தார்.
சரசு தேநீர் வைப்பதற்காக குசினிக்குள் புகுந்து விட்டாள்.
அவர் வரும் வேளைகளில் அவளுக்கு சந்தோஷந்தான். இருந்தாலும் அடிமனக் கிடக்கையில் ஏதோ துரு....துருவென்று முடக்குவாதம் செய்தது. பு£¤யாத என்னவோ ஒன்று.
“என்ன சரசு தேத்தண்ணி வைக்கிறியா.... எனக்கும் கொஞ்சம் கொண்டா சுடச்சுட.”
குட்டித்தம்பியர் வழமையாக உட்காரும் மரப்பெட்டியில் குந்திக் கொண்டார். தலைக்குமேல் பூவரசுநிழல் விழுந்திருந்தது. வெயில் சற்று எட்டித்தான் நின்று கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்திற்காவது அதில் இருக்கலாம். அப்புறம் அந்த இடத்தில் இருக்க இயலாது. உள்ளே போக வேண்டும் அல்லது வெளியே போகவேண்டும்.
சரசு தேநீர் க் கோப்பையையும் சர்க்கரைக் குறுகலையும் கொண்டு வந்து வைத்தாள். குட்டித்தம்பியர் செழுமையான அவள் உடலை ஒரு தடவை கண்களால் ஸ்பா¤சித்தார். அவளும் கவனிக்காமல் என்ன....உதட்டைப் பிதுக்கிக் கொண்டு ஒருக்களித்துப் பார்த்தாள்.
கொடுப்பிற்குள் வைத்திருந்த வெற்றிலைச் சப்பலை து£....து£வென்று துப்பிவிட்டு செம்பிலிருந்த நீ£¤னால் நன்றாக கொப்பளித்துக் கொண்டார். இதற்காகவே வந்தவர் போல் தேநீரை ருசித்துக் குடித்தார்.
அவருடைய முகத்தில் இரவு பூசிய பூச்சு இன்னும் அழியவில்லை. மழுங்க விழித்திருந்த முகத்தில் மீசையிருந்த இடத்தில் ஏதோ அழிந்துபோன கறுப்புக் கோட்டின் மெல்லிய தழும்பு. கண்களில் நித்திரையின் கனப்பு. அந்தக் கோலத்தில் அவரைப்பார்க்க சற்று வேடிக்கையாக இருந்தது. இவரா இரவு சங்கிலியனாக வீரத்தோடு பொ¤ய மீசையைத் திருகிக் கொண்டு வந்தவர்? “என்ன புள்ள, இரவு கூத்துப் பார்த்தியா.... எப்படி இருந்தது....?”
“என்ன....ஏதோ....காணாத ளாட்டம். முன்னுக்குத்தானே இருந்தனான்....பார்த்துப் பார்த்து பல்லைக் காட்டிப்போட்டு....”
குட்டித்தம்பியர் விநயமாய் சி£¤த்தார். அவரது சின்னத் தொந்தி சற்றுக் குலுங்கியது.
“அது கிடக்கட்டும் புள்ள.... என்ர படிப்பு எப்படி....?”
“பின்கூத்து நீங்க வந்த பிறகுதான் வலு எழுப்பமாக இருந்தது எண்டு எல்லோரும் பறஞ்சு கொண்டு வந்தினம்....”
குட்டித்தம்பியருக்கு வலு சந்தோஷம். தேநீர் முழுவதையும் ஒரே மூச்சில் உறிஞ்சுவிட்டு கோப்பையை வைத்தார். மடிக்குள் செருகி வைத்துக் கொண்டு வந்த சிறிய “பார்சல்” ஒன்றை அவளிடம் நீட்டிக் கொடுத்தார்.
அவள் பவிசாகச் சி£¤த்துக் கொண்டே வாங்கி வி£¤த்துப் பார்த்தாள். அது பூ விழுந்த சட்டைத்துண்டு அந்தக் கணத்தில் பொன்னுவைத்தான் நினைத்துக் கொண்டாள் சரசு. இன்னும் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அவர் எப்போதாவது இப்படித் தருவது தான். னாலும் அதற்காக ஏங்கி இருந்தவளல்ல....
இருவருமாக என்னவோ எல்லாம் பேசினர். வெளியில் யாரோ வரும் சத்தம் கேட்டது. இருவருமே ஏக காலத்தில் திரும்பிப் பார்த்தனர். பொன்னு நன்றாக நனைந்துபோய் வந்து கொண்டிருந்தாள். அவள் முகத்திலும் கைகால்களிலும் சேறு அப்பியிருந்தது. அவள் அழுதிருக்க வேண்டும். முகம் வேறு வீங்கியிருந்தது. பக்கத்தில் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு வடக்குத் தெருக்கிழவி மோ¤. அவள் தலையில் மீன் விற்கும் கடகமும், சுளகும். பின்னால் சின்னவி. கேவி....கேவி இன்னும் அழுது கொண்டுவந்தான். சரசு ஒருகணம் அப்படியே திகைத்து நின்றாள். அடுத்த கணம் குரல் எடுத்து எட்டு வீட்டுக்கு கேட்க கத்தினாள்.
“என்ன நடந்தது? என்ர புள்ளைக்கு என்ன நடந்தது? சின்னவி அடக்கி வைத்திருந்து வெடித்துச் சிதறியதுபோல் பெரும் குரல் எடுத்து அழுதான்.
“அக்கா புறக்கி வைத்திருந்த மீனை அந்த னக்கோட்டைப் பொடியன் களவெடுத்துப் போட்டான்.... அக்கா அவன அடிச்சா, அவன் அக்காவை கடலுக்க தள்ளிப் போட்டான்....உம்....உம்...”
மோ¤க்கிழவி அப்போது தான் குட்டித்தம்பியர் முற்றத்தில் இருப்பதைக் கவனித்தாள். முகம் சுறுக்கென்று உள் இழுத்துக் கொண்டது. வெறுப்பு டன் விசுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“இந்தா சரசு புள்ளயக் கூட்டிக்கொண்டு முதலில உள்ள போ....எல்லாத்தையும் நான் சொல்லுறன்.”
சரசுவுக்கு விளங்கி விட்டது. பொன்னுவை மெதுவாக அழைத்துக் கொண்டு உள்ளே போனாள். மோ¤க் கிழவியும் தொடர்ந்து போனாள். உள்ளே கிழவியின் மெல்லிய குரல் வெகுநேரம் கேட்டது. “இந்தா சரசு நான் சொல்லுறத கவனிச்சிக் கேள். விலைபோகிற குமர் வீட்டுக்கு வந்திருக்கு. இனி எண்டாலும் இந்த அறுதலிமோன அண்டப் பிடிக்காத....”
மோ¤க் கிழவி வெளியே வந்தாள். இறக்கி வைத்திருந்த கடகங்களைத் தலையில் து£க்கி வைத்துக் கொண்டாள். குட்டித்தம்பியர் இருப்பதையே கவனியாதவளாய் விடு... விடுவென நடந்தாள்.
குட்டித்தம்பியார் எதுவும் பு£¤யாதவராய் முற்றத்து மரப்பெட்டியில் இன்னமும்தான் இருந்தார். வெயில் மரப்பெட்டிக்கு அருகே வந்துவிட்டது. இனி அதில் இருக்க இயலாது. கண்கள் வேறு சுழற்றி அடித்தது. ஒரு கண் நித்திரை கொண்டுதான் தீர்க்க வேண்டும். சரசுவைப்பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்தார். வெகுநேரம் சரசு வெளியில் வரவே இல்லை. சரசு ஏன் வெளியில் வரவில்லை....?
“சரசு அப்ப நான் போட்டு வாறன்....”
அவர் எழுந்து கொண்டார். தோளில் கிடந்த துண்டினால் முகத்தை அழுத்தித் துடைத்தார். வீட்டை நோக்கி விளங்காத தீவிரத்துடன் நடக்கத் தொடங்கினார்.
சரசு வெளியில் வந்தாள். குட்டித்தம்பியர் கொண்டு வந்த துணிப்பார்சல் வி£¤த்தபடிதான் முற்றத்தில் கிடந்தது.
“குட்டித்தம்பியரும் கிழவி சொன்னதைக் கேட்டிருப்பாரோ....”
அவள் மறுபடியும் கணபதியை நினைத்துக் கொண்டாள். பொன்னு இனி மீன் பொறுக்க வெளியில் போக மாட்டாள். குட்டித்தம்பியரும் இனி வரமாட்டார். அப்படித்தான் அவள் நினைத்தாள். அவ்வாறே நடக்க வேண்டும் என்றும் விரும்பினாள்.
அவள் எல்லோரையும் இழந்துதான் விட்டாள். னாலும் என்ன? எதையும் இழந்துவிடாத நெஞ்சுறுதி. அவளுக்கு அப்படி ஒரு மனப் பயிற்சி எப்படியோ ஏற்பட்டுவிட்டது.

கட்டுகள்

டானியல் அன்ரனி

வானொலியில் ஏதோ சினிமாப்பாடல் இரைந்து கொண்டிருந்தது. அந்தப்பாட்டோடுகூட தானும் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் தங்கச்சி பத்மா.
“ஏ.... பத்மா.... கொஞ்சம் குறைச்சுவை ரேடியோவை. அது குளறுகிறது பத்தாம இவ வேற பாடுறா.”
சாப்பிட்டுவிட்டு கைகளைத் துடைத்துக் கொண்டே அடுக்களையிலிருந்து வெளியே வந்தவன் எ£¤ச்சலுடன் சத்தம் போட்டான்.
அவனுடைய உரத்த சத்தம் கேட்டதும் பாட்டு திடீரென தணிந்தது. மழை அடித்து ஓய்ந்த அமைதி. மறுபடியும் மெல்லிய முணுமுணுப்பு.
“விடிஞ்சா பொழுதுபட்டால் ரேடியோவுக்கு பக்கத்திலேதான் படுத்துக்கிடக்கிறாள். வேல வெட்டிக்குச் சொன்னாத்தான் அதுக்க நோகுது.... இதுக்க பிடிக்குது என்று சாலம் காட்டுகிறாள். ஒருக்கா இவளை கொஞ்சம் உறுக்கி வை மோன.”
அம்மா அடுக்களைக்குள் இருந்தபடியே முறையிட்டாள். இவன் எதுவும் பேசவில்லை. “ஹாங்க”£¤ல் கொழுவிக்கிடந்த சேட்டை எடுத்துப்போட்டுக் கொண்டான். வாசலில் கிடந்த செருப்பை கால்களில் செருகிக்கொண்டே விறாந்தையை விட்டு இறங்கினான்.
சாப்பாடு வயிற்றுக்குள் இறங்கியதும் உதடுகளில் வழமைபோல் ஏற்படும் அ£¤ப்பு. “எப்படியாவது ஒரு சிகரட் வாங்கிப் பற்றவைத்து விட வேண்டும்” என்ற மனத்தவிப்புடன் படலையை நோக்கி நடந்தான்.
“தம்பி! மறுபடியும் மழை வரும்போல இருக்கு. குடையை எடுத்துக்கொண்டு போ மோன....” உரத்துக் கூறிக் கொண்டே அடுக்களைக்குள் இருந்து எழுந்து வெளியே வந்த அம்மா அவனை நெருங்கி வந்து மெதுவாகக் குசுகுசுத்தாள்.
“....தம்பி.... அக்காவிட வி~யமாக ஐயாவாக்கள் பேசப் போயிருக்கினம். இப்ப வந்து விடுவினம். துலைய போகாம சுறுக்கா வந்துவிடு மோன....”
அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. மௌனமாகப் படலையைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். வீதி முழுவதும் இருண்டு கிடந்தது. சற்று நேரத்துக்கு முன் பெய்து ஓய்ந்த மழையினால் மின்சாரத்தில் எங்கேயோ பழுது ஏற்பட்டிருக்க வேண்டும். வீதி விளக்குகள் முழுவதும் அணைந்திருந்தன. மை இருளில் வெள்ளை இராட்சதா;களாய் விளக்குக்கம்பங்கள் பயமுறுத்தின.
வானத்தை நிமிர்ந்து பார்த்தான். மறுபடியும் மேகங்கள் திரண்டு கொண்டு வந்தன. திடுமென மழை வந்துவிடும்போல பயமுறுத்தின. துமி ஒன்று காதுப்பொருத்தில் விழுந்து ஜில்லிட்டது.
அவன் நடையைத் தூ¤தப்படுத்தினான். “அம்மா சொன்னதுபோல குடையைக்கொண்டு வந்திருக்கலாம். விசர் வேலை பாத்திற்றன். இப்ப மழை வந்திற்றால் என்ன செய்யிறது....”
ஒரு கணம் மனம் அங்கலாய்த்தது. மறுகணமே அதை நிராகா¤த்தது. தன்னைத்தானே மறுபா¤சீலனை செய்துகொண்டு விட்டதுபோல் வெட்கப்பட்டது.
பொ¤ய மழை பெய்த போதும்கூட விறுமன்களாட்டம் கோவில் வளவில் நின்று நாள் முழுவதும் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்த அவன் இந்தத் துமியைக் கண்டதும் குடையை நினைத்துக் கொண்டதை நினைத்து தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை வியந்தான். அதற்குக் காரணமான அந்த வாழ்வையும் எண்ணிக் கொண்டான்.
அவன் தேகம் புல்லா¤த்தது. அவன் கொழும்பு பொ¤ய தபாற்கந்தோ£¤ல் “ரெலிபோனிஸ்ட்” டாக உத்தியோகம் ஏற்று ஆறு மாதங்கள்தான் கடந்திருந்தன. அந்த ஆறு மாத காலத்துக்குள் அவனுக்குள் ஏதோவொன்று இருந்துகொண்டு அவனை மாற்றுகின்ற அந்தா¤ப்பு. அதற்கு எதிராக அவன் போராடுவது போன்ற முனைப்பு. அது குடும்பம் முழுவதையும் பரவிப் பாதித்திருந்தது.
இம்முறை ஊருக்கு இரண்டாவது தடவையாக லீவு எடுத்துக்கொண்டு வந்திருந்தான். அதுவும் அவனுடைய அக்காவின் திருமண வி~யமாகப் பேசி முடிவு செய்ய வேண்டியிருப்பதாக உடன் வரச்சொல்லி ஐயா கடிதம் எழுதியிருந்தார்.
இதில் தன்னிடம் கேட்பதற்கு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தொ¤யவில்லை. அக்கா ஏற்கனவே விரும்பிய இடம்தான். ஐயாவும், அம்மாவும் சம்மதப் பட்டால் செய்து கொடுக்க வேண்டியதுதான். முன்னம் இப்படியெல்லாம் அவனுடைய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள அவர்கள் முயன்றதில்லை. முன்னுக்கு நின்று சொன்னாலும் வீட்டில் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை.
இப்போது மாத்திரம் ஏன் இந்த நிலைமை? அவன் இப்போது அரசாங்க உத்தியோகஸ்தனாகி விட்டதில் புதிதாக எந்தக் கொம்பும் முளைத்துவிட வில்லையே?
அவனுக்கு உடம்பு முழுவதும் பற்றி எ£¤வது போல் எ£¤ச்சல் எ£¤ச்சலாக இருந்தது.
அந்த வீட்டில் அவனுக்குக் கிடைக்கும் உபசி£¤ப்பு மா¤யாதை ஊ£¤ல் உள்ளவர்களின் திடீர் கவனிப்பு. அடிக்கொருதரம் குசல விசா£¤ப்பு. ஆறு வரு~ங்களாக அலைந்து வீதிகளில் வேலையில்லாமல் தி£¤ந்த போது....
அந்த வாழ்க்கை. அதில் அனுபவித்த நரகவேதனைகள். சொந்த வீட்டிலேயே அந்நியனாக, புறக்கணிக்கப்பட்ட நிலை. ஓ! அந்த நரகம்....அது வரவே வேண்டாம்.
அவன் தனக்குள்ளே பெருமூச்சு விட்டுக் கொண்டான். அவனுக்குள் யாரையோ எதற்காகவோ பழி வாங்க மூண்டெழும் நெருப்பு.
வீதியில் தண்ணீர் தேங்கி நின்ற குழிக்குள் ஒரு கால் 'சளக்'கென்று இறங்கிவிட்டது. ஒரு கணம் தடுமாறி விழப்போனவன் சமாளித்துக் கொண்டே நீருக்குள் அமிழ்ந்து விட்ட ஒரு காலை 'அவக்'கென்று எடுத்தான்.
ஒற்றைச் செருப்பு அறுந்துவிட்டது. இரண்டு செருப்புக்களையுமே சுழற்றி வேலிக்கு அப்பால் வீசி எறிந்தான். வெறும் கால்களுடனேயே அந்த நனைந்த வீதியில் 'காயாக' நடந்தான்.
கால்களில் செருப்புகள் அணியாமல்தானே இந்த ஊ£¤லுள்ள கல் ஒழுங்கைகளிலும்.... முள்ளுப் புதா;களிலும்.... சேற்று நிலங்களிலும் நடந்து தி£¤ந்தவன். இப்போது என்ன வந்துவிட்டது.
சற்று தூரத்தில் அந்த வீதி மிதக்கின்ற சந்தியில் இருக்கும் மணியண்ணா¤ன் கடை திறந்துதான் கிடந்தது. கடைக்கு முன்னால் கொழுவியிருந்த அ£¤க்கன் லாம்பின் வெளிச்சத்தில் சிலர் சாமான்கள் வாங்கிக் கொண்டு நிற்பது தொ¤ந்தது.
அவன் எதி£¤ல் சைக்கிளில் யாரோ இருவர் வந்து கொண்டிருந்தனர். அதில் பின்னால் 'கா¤யா¤ல்' குந்தியிருந்தவன் கேட்டான், 'என்ன நேரம் அண்ணே இருக்கும்?'
இவன் நேரத்தைக் கவனிப்பதாக மணிக்கட்டைப் பார்த்தான். அப்பொழுதுதான் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு வராதது நினைவுக்கு வந்தது. அதனால் என்ன “இப்ப எட்டரை மணி இருக்கும். படம் தொடங்கியிருக்காது. கெதியாப்போனா £¤க்கற் எடுக்கலாம்”.
இவன் அவர்கள் கேட்காத கேள்விக்கும்கூட பதில் அளித்துவிட்டு வெறுமையாகக் கிடந்த மணிக்கட்டில் பதிந்திருந்த கைக்கடிகாரத்தின் வடிவத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டான்.
கடைக்கு முன் அவனைக் கண்டதும் மணியம் அண்ணர் காவிப்பற்கள் தொ¤ய சி£¤த்தார். சற்று நேரம் வரை சாமான் வாங்க வந்து நின்றவர்களுடன் சள்....சள்....என்று எ£¤ந்து விழுந்து கொண்டிருந்தவர் அவர். “என்ன தம்பி எப்ப கொழும்பால வந்தனி.... அங்கேயும் மழை நல்லாப் பெய்யுதோ....?”
அவர் வழமையாகக் கேட்கும் கேள்விதான். அதில் எந்தவித வாஞ்சையும் இல்லை. ஒப்புக்காக ஏதாவது சொல்லி வைக்க வேண்டும் என்று நினைத்தவன் அடுத்த கணம் எதையோ நினைத்துக் கொண்டவனாய் மௌனமாகிவிட்டான்.
சின்ன வயதில் எப்போதோ ஒரு நாள் அரை றாத்தல் பாண் வாங்கச் செல்ல வந்துபோது ஒரு சதம் குறைந்துவிட்டது என்பதற்காக....வீட்டுக்குத் திரும்பி அனுப்பி வீதியில் இருட்டில் கிடந்த நாய்மேல இடறுப்பட்டு, அதன் கூ£¤ய பற்கள் அவன் தொடையில் பதிய.... அம்மா....அம்மா.... என்று குளறிக் கொண்டு வீட்டைத் தேடி ஓடிய ஓட்டம்....
“அக்காவுக்கு கல்யாணப் பேச்சு நடக்குது போல் இருக்கு.... அதுவும் கனகாலமாக வீட்டோட இருக்கு குமர் காரி யத்தை வசதி வரும்போதே செய்து போட வேணும். பொடியனும் நல்ல குணமுள்ளவன். சோலி சுரட்டுக்குப் போகாத குடும்பம்.... தம்பி இந்தச் சம்பந்தத்தை விட்டுடாதீங்க”.
மணி அண்ணன் கதைத்துக்கொண்டே தன் அலுவலில் கண்ணாக இருந்தார். அடிக்கொரு தரம் வெற்றிலையைக் கிள்ளி பாக்குச்சீவலை கொடுப்புக்குள் திணித்துக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவனுக்கு அருவருப்பாக இருந்தது.
பைக்குள் கிடந்த ஒரு ரூபா குற்றியை எடுத்து மணி அண்ணனிடம் நீட்டிக்கொண்டே “இரண்டு பிறிஸ்டல் தா அண்ணே” என்று கேட்டான்.
மணி அண்ணர் அவனை அதிசயமாகப் பார்த்தார். இவன் சிகரட் பற்ற வைத்ததை அவர் ஒரு போதும் கண்டதில்லை. அவர் என்ன, அந்த ஊ£¤லேயே ஒருவரும் கண்டிருக்க முடியாது.
மூன்று மாதத்திற்கு முன் 'நைற் சிவ்ட்" செய்து கொண்டிருந்தபோது நித்திரை விழிக்க உதவும் அந்த மருந்தைப்பற்றி, கூட வேலை செய்துகொண்டிருந்த நண்பன் வற்புறுத்தியதின் போ¤ல் அதைத் தொடக்கி வைத்தான்.
'நாலு பேரோடு.... நாலு இடத்தில பழகிறனீங்க இது எல்லாம் குடிக்கத்தானே வேணும்....இதில் என்ன குறையிருக்கு தம்பி".
மணி அண்ணர் தனக்குள் எழுந்த கேள்விக்குத் தானே வியாக்கியானத்தைக் கூறிக் கொண்டு இரண்டு சிகரற்றுகளையும் மிகுதிச் சில்லறைகளையும் கொடுத்தார்.
அவன் ஒரு சிகரட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான். மேசையில் கிடந்த காகிதத்துண்டை எடுத்துப் பக்கத்தில் எ£¤ந்து கொண்டிருந்த குப்பி விளக்கில் பிடித்து மற்ற சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டே வீட்டை நோக்கித் திரும்பி நடந்தான்.
அவன் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி முன்னுக்கு இருக்கும் அமொ¤க்கன் பெ~ன் வீடுதான் பொ¤யதம்பியருடையது. அந்த வீட்டுக்கு முன்வரும் போதெல்லாம் நெஞ்சில் ஒரு படபடப்பு. இதயத்தின் அசைவில் இயந்திர வேகம்....அன்று ஒரு நாள் இருட்டில் குதிரை உயரத்துக்கு வளர்ந்த அந்த நாயின்மேல் இடறுப்பட்டு.... அந்த சனியன் கேற்றுக்குள் சுருண்டு கிடந்து அவனையே உற்றுப் பார்ப்பதுபோல்....
அவன் இப்போது பயம் கொள்ளவில்லை. தொடையில் அழுத்தமாகப் பதிந்திருந்த அவற்றின் வடுக்களை மாத்திரம் சாரத்துக்கு மேலால் பார்த்துக் கொண்டான்.
தூரத்தில் குள்ளமான ஒருவன் கைகளை உயர்த்தி வீசி தனக்குள் எதையோ உரத்துப் பேசி பாவனை செய்துகொண்டு வந்தான். கையில் வைத்திருந்த சிரட்டை வாயில் வைத்து ஒரு தடவை தம் பிடித்து இழுத்துவிட்டு விரல் இடுக்கில் ஒளிப்பொட்டு தொ¤யாமல் மறைத்துக்கொள்ள நினைத்தவன், மறுகணம் தன்னுடைய செய்கைக்காக வெட்கப்பட்டான்.
'எனக்கு நியாயம் என்று படுகிறதை செய்யிறதுக்கு மற்றவர்களுக்காக ஏன் பயப்பிடவேணும், ஒளிக்கவேணும்?"
தூரத்தில் வந்தவனை இனம் கண்டுகொண்டான். அவனுடைய சிநேகிதன் ஆனந்தன், புதிய நாடகம் ஒன்றின் ஒத்திகையை வீதியிலேயே தனிமையில் செய்து கொள்கிறான். அப்படி ஒரு பழக்கம் அவனுக்கு. அந்த வழக்கத்துக்காக அவனை 'பனியன்" என்று ஏளனமாக முதுகுப்புறம் நின்று பலர் நகைப்பதும் அவனுக்குத் தொ¤யும். அதற்காக அவன் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அது தன்னுடைய கலை ஆர்வம் என்று பெருமைப்பட்டுக் கொள்வான். ஊ£¤லிருந்த போது இருவரும் சேர்ந்தே பல நாடகங்களை மேடையேற்றி யிருக்கின்றனர்.
'என்ன மச்சான்....புது நாடகத்துக்கு ஒத்திகை நடக்குதோ"? 'ஓம்.... மச்சான்.... இந்த மாதம்.... புது நாடகம் அரங்கேத்திறம், சிலம்பு - புதுமையாக இருக்கும்".
இவன் தனக்குள் சி£¤த்துக் கொண்டான். சிலம்பில் என்ன புதுமை செய்யப்போகிறான்?
இருவரும் சில நிமிடங்கள் தங்கள் பழைய வாழ்க்கை களைப் பற்றி நினைவு மீட்டுக் கொண்டனர். பல புதிய தகவல்களைப் பா¤மாறிக் கொண்டனர். ஆனந்தன் வேலை கிடைக்காததைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டான். இவன் அலுத்துக் கொண்டான்.
'அப்ப போறதுக்கு இடையில வீட்ட வந்திற்றுப் போ மச்சான். அம்மா கூட நீ வீட்ட வருவதில்லை என்று குறை நினைக்கிறா...."
அவன் நண்பனிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி நடையைத் தூ¤தப்படுத்தினான்.
அக்கா உள் அறையில் இருந்து பீடி இலை வெட்டிக் கொண்டிருந்தாள். பத்மா வீட்டுக்குள் இருந்து கொண்டு சுற்றி யிருந்த சின்னஞ் சிறுசுகளுக்கு தான் சமீபத்தில் பார்த்த தமிழ் சினிமாப் படத்தின் கதையைப் பாவத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அம்மா திண்ணையில் தூண் அருகில் குந்திக் கொண்டு வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.... அம்மா வாசலில் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் என்பது அங்குள்ள சகலருக்கும் தொ¤யும்.
ஐயா வீட்டை விட்டு அம்மான் வீட்டுக்குப் போய் ஒரு மணித்தியாலம் கடந்திருக்கும். அவ்வளவு நேரமும் அங்கு என்ன பேசுவதற்கு இருக்கு என்று அவனுக்கு விளங்கவில்லை.
அவன் வரும்போது புகையிரதத்துக்குள் படிப்பதற்காக வைத்திருந்த நாவலை மீண்டும் கையில் எடுத்துப் பி£¤த்துப் படிக்கத் தொடங்கினான். அது அலுப்புத் தட்டுகிற அழுகுண்ணிக் காதல் கதை.
வாழ்க்கையின் சாராம்சத்தை அதன் சிக்கல்களை அவனால் அதில் தா¤சிக்க முடியவில்லை.
அவன் எப்போதாவது இப்படிப்பட்ட கதைகளைப் படிக்க நோ;ந்திருக்கிறது. அவற்றையே விழுந்து விழுந்து படிப்பவர்களையும் அவனுக்குத் தொ¤யும்....
ரேடியோ இருந்த மேசைக்குப் பின்னாலும், அவை போல் சில புத்தகங்களும் அவன் கண்ணுக்குத் தட்டுப்பட்டன....
அது தங்கச்சியின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவன் ஏற்கனவே ஊகித்துக் கொண்டான். அவன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வெள்ளைத் தாள் ஒன்றைக் கிழித்து எடுத்து அறை நண்பன் ஏரம்பமூர்த்திக்கும், கந்தோ£¤ல் வேலை செய்யும் ரஞ்சினிக்கும் காகிதம் எழுத வேண்டும் என்று நினைத்தவனாக பேனாவைத் தேடினான்.
அவன் சேட் பையில் குத்தியிருந்த பேனாவை யாரோ எடுத்துவிட்டமை அப்போதுதான் அவனுக்குத் தொ¤ந்தது.
'சேட் பொக்கற்றில் இருந்த பேனையை யார் எடுத்தது? மா¤யாதையாகச் சொல்லிப் போடுங்க"
அவன் குளறியது வீடு முழுவதும் அதிர்ந்தது. அம்மா பதறிப்போய் திரும்பிப் பார்த்தாள்.
சின்னவன் பேனாவைக் கையில் வைத்துக் கொண்டு சுவர் அருகே மசந்திக்கொண்டு நின்றான். செய்யாத குற்றத்திற் காக தண்டனை அனுபவிக்கக் காத்திருக்கும் அப்பாவியின் மிரட்சி. 'ஆரடா....இது எடுத்தது? நீயா எடுத்தனி?"
அவன் இல்லை என்பதுபோல் தலை அசைத்தான். வாய் எதையோ முணுமுணுத்தது.
'அக்காவா எடுத்தவ?"'ஆங்.... அண்ண...."
'என்னட சாமான்களை ஒருத்தரும் தொடக்கூடாது என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறன்".
அவன் சத்தம் போட்டுவிட்டு முதலில் நண்பன் ஏரம்பமூர்த்திக்குக் கடிதம் எழுதத் தொடங்கினான்.... மழை திடீரெனப் பலத்தது. யாரோ படலையைத் திறந்து கொண்டு மழையில் நனைந்தபடி உள்ளே வருவது தொ¤ந்தது.... அது ஐயா தான். அம்மா ஆவலுடன் குந்தில் இருந்து எழுந்து கொண்டாள்.
கத்தா¤க்கோலுக்கு இடையில் நறுக்....நறுக்....கென்று பீடி இலை அறுபடும் ஓசை நின்றுவிட்டது. அக்காவும் வெளித் திண்ணைக்கு வந்துவிட்டாள். பரீட்சை முடிவை எதிர்பார்த்திருக்கும் ஐயா நினைத்துக் கொண்டு போனதற்கு மாறாக அம்மான் வீட்டில் நடந்திருக்கலாம் என்று மட்டும் அவனுக்குப் பூ¤ந்தது. அவன் இன்னும் அமைதியாக எழுதிக் கொண்டுதான் இருந்தான். அங்கு நடக்க இருப்பதைப் பற்றி அவனுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாதவன் போல்....
சில நிமிடங்கள் வரை ஐயாவும் அம்மாவும் என்னவோ குசுகுசுத்தார்கள். எந்தவித வாக்கியங்களும் தௌ¤வாக அவனுக்குக் கேட்கவில்லை. அவனுடைய பெயர் மாத்திரம் அங்கு அடிக்கடி பாவிப்பதை கிரகித்துக் கொண்டான். ஏரம்பமூர்த்திக்கு கடிதம் எழுதி முடித்துவிட்டு ரஞ்சினிக்கு எழுதத் தொடங்கியபோது தான் அம்மா அருகே வந்து நின்றாள்.
'தம்பி அக்காவட கல்யாணம் குழம்பிப்போய்விடும் போல இருக்கு". அம்£வின் குரல் தழதழத்தது. அம்மா சின்ன விசயத்திற்கும் மூக்கைச் சீறி அழுபவள் தான்.
'ஏன் அக்காவும் அவரும் ஒருத்தரை ஒருத்தா; கன காலமாக விரும்பி இருந்தவங்கதானே....வீட்டிலும் விருப்பம் தானே.... அவையளுக்கு என்ன வந்திற்று, சீதனம் ஏதும் கூட எதிர்பர்க்குவினமோ...."
'இல்லை மோன, எல்லாத்துக்கும் ஓம் எண்டு தான் இவ்வளவு நாளும் இருந்தவிய. இப்ப....திடீரென பதில் மாப்பிளை தந்தால் தான் செய்வினம் எண்டு நிக்குவினம்".
அவன் அதிர்ச்சியுடன் அம்மாவை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகம் கறுத்து இறுகிக் கிடந்தது. அந்தக் கண்களில் தொ¤வது கோபமா....பா¤தாபமா.... இன்னதென இனம் கண்டுகொள்ள முடியாத ஏதோ ஓர் உணர்வு. அம்மாவால் தொ¤ந்து கொள்ள முடியவில்லை.
'எல்லாம் திட்டம் போட்டுத்தான் என்னைக் கொழும்பில் இருந்து காயிதம் எழுதிக் கூப்பிட்டிருக்குவினம்".
அவன் விறுக்கென்று கதிரையை அரக்கிக் கொண்டு எழுந்தான். வளையைப் பிடித்துக் கொண்டு நின்றபடி இருண்டு கிடந்த சூனியத்தை உற்று நோக்கினான். ஒரு கணம் வெறுமை அவன் இதயத்தை அ£¤த்தது. மறுபடியும் கதிரையில் வந்து குந்திக் கொண்டு மேசையில் முகம் கவிழ்ந்தான். மீண்டும் தலையை நிமிர்த்தி அம்மாவைப் பார்த்தான்.
ஐயா....அக்கா....தம்பி....தங்கைகள். அவன் வாயிலிருந்து விடுதலை பெறப்போகும் வார்த்தைக்காகக் காத்து நிற்கின்றனர்.
;அதுக்கு.... இப்ப.... நீங்க என்ன செய்யப் போறீங்க...."
'நீ ஒம் எண்டு ஒரு வார்த்தை சொன்னால் சா¤ தம்பி. உன்னத்தான் பதில் மாப்பிள்ளையாக கேக்குவினம். அந்தப் புள்ளயும் நல்ல குணமானவள் மோன".
அவன் இப்போது அதிர்ச்சியடையவில்லை. அவனுக்கு அம்மா, ஐயா, அக்கா, தங்கச்சிமார்....மாமன், மாமி....மாப்பிள்ளை இந்த சமூகம் எல்லாவற்றிலுமே எ£¤ச்சல் எ£¤ச்சலாக வந்தது.
அக்காவுக்கு அவன் பிணை நிற்கவேண்டும். அவனைத் தொடர்ந்து வருகின்ற தங்கைமாருக்கு இவ்வாறு பிணை நிற்க எத்தனை தம்பிமார்கள் தயாராக இருக்கிறார்கள். அவனுக்கு என்று தனிப்பட்ட ஆசைகள்....விருப்பு வெறுப்புகள் அவன் எதிர்கால வாழ்வு பற்றி ஏன் இருக்கக்கூடாது? அத்தனையும் குடும்ப....உறவுகள் என்ற கட்டுக்குள் அடங்கவேண்டியவை தானா....?
அவன் மௌனமாகத் தலையை மேசையில் கவிழ்த்துப் போட்டுக் கொண்டு கிடந்தான். அம்மாவுக்குப் பொறுமை இல்லை. 'தம்பி....என்ன முடிவு மோன சொல்லுற....?"
அவன் மீண்டும் தலையை நிமிர்த்திப் பார்த்தான். அம்மாவைப் பார்க்க அவனுக்கு இப்போது பா¤தாபமாகத்தான் இருந்தது. எல்லாத் துயரங்களுமே அவள் முகத்தில் சாசுவதமாகிவிட்ட இறுக்கம்.
அவன் அமைதியாக பதட்டமில்லாமல் சொன்னான். 'அம்மா....இனிமேல் யாருக்கும் கல்யாணம் பேசப்போறதாக இருந்தால் பதில் மாப்பிள்ளை கேட்காத இடமாகப் போங்க".
அம்மா அவன் பேச்சைக் கேட்டதும் அப்படியே அலமந்து போய் நின்றாள்.
----